புத்தகக்கடை


ஒவ்வொறு முறையும்
கைகள் ஆசையாய் புத்தகத்தை
தடவும் போதெல்லாம்
அனிச்சையாய் விலையை
குத்துமென் கண்கள்.

வரவுக்கும் செலவுக்கும்
பலிகொடுத்த வாழ்க்கையின்
ரத்த நாற்றம்
வழக்கம் போல் அங்கிருந்து
வெளியேறச் செய்யும்.

எனது இயலாமைக்கும்
கடைகாராரின் எதிர்பார்ப்புக்குமிடையே
வாசல் கடக்கும் வினாடி,
ஆயிரம் பூரான்கள்
உடலெல்லாம் விரவிப்பரவும்!

கவிதை: சப்தமாய் மௌனத்தைப் பற்றி…


***
மௌனம்,
எல்லா இரண்டு வார்த்தைகளுக்கு நடுவிலும்
நதியாய் ஓடிக்கொண்டிருக்கிறது.

நாம் மட்டும்,
வார்த்தைகளைக் குடித்தே
தாகம் தீர்த்துக்கொள்கிறோம்!
***
***
எல்லா வார்த்தைகளும்
தீர்ந்து போன ஒருநாளில்,
மௌனம் தன்னைப் பற்றி
எழுத ஆரம்பித்தது!
****
***
குடித்து முடித்த கோப்பையில்
எஞ்சி நிற்கும் தேனீர் துளிகளைப்போல்,
நாம் பேசி முடித்த தருணங்களில்
எஞ்சி நிற்கும் மௌனம்…
***
***
பொதுக்கழிப்பரை சுவற்றில்,
கிறுக்கப்பட்டிருக்கும் வார்த்தைகளின் வாசம் –
உனக்கும் எனக்குமான துரத்தை
மௌனத்தால் அளக்கும்!
***
***
இயக்கமற்றிறுப்பது மௌனமென்றால்,
இயங்கி கொண்டிருக்கும் மௌனத்தை
என்னவென்று அழைப்பது?
***
***
எந்த பிரபஞ்சப் பறவை
கொத்திப்போகும்
மௌனம் பற்றிய இந்த கவிதையின் வார்த்தைகளை…
***
***
நாம்
தனித்திருக்கும் தருணங்களில்
மௌனமாய் நீ
வெட்கப்படும் போதெல்லாம்,

என்னால்
ஏனோ
வெறும் மௌனமாய்
அதை எதிர்கொள்ள முடிவதில்லை…
***
***
எங்கே போய் விடுகின்றன?
பேசுகின்ற வார்த்தைகள்
பேசி முடித்த பிறகு,,,
***