<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>பொதுஜனம்</title>
	<atom:link href="http://podhujanam.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://podhujanam.wordpress.com</link>
	<description>...உங்களில் ஒருவன்...</description>
	<lastBuildDate>Mon, 14 Nov 2011 15:15:12 +0000</lastBuildDate>
	<language>ta</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.com/</generator>
<cloud domain='podhujanam.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://1.gravatar.com/blavatar/db0aac084610e18272748445878457cc?s=96&#038;d=http%3A%2F%2Fs2.wp.com%2Fi%2Fbuttonw-com.png</url>
		<title>பொதுஜனம்</title>
		<link>http://podhujanam.wordpress.com</link>
	</image>
	<atom:link rel="search" type="application/opensearchdescription+xml" href="http://podhujanam.wordpress.com/osd.xml" title="பொதுஜனம்" />
	<atom:link rel='hub' href='http://podhujanam.wordpress.com/?pushpress=hub'/>
		<item>
		<title>கரடி குட்டி</title>
		<link>http://podhujanam.wordpress.com/2011/09/25/%e0%ae%95%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/</link>
		<comments>http://podhujanam.wordpress.com/2011/09/25/%e0%ae%95%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Sun, 25 Sep 2011 05:50:59 +0000</pubDate>
		<dc:creator>ஜானகிராமன்</dc:creator>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[சினிமா]]></category>

		<guid isPermaLink="false">http://podhujanam.wordpress.com/?p=301</guid>
		<description><![CDATA[வாழ்க்கை தான் எவ்வளவு எதிர்பாராமைகள் நிறைந்தது. நமக்கான மகிழ்ச்சியும் ஆபத்தும் அடுத்தடுத்த வினாடிகளில் பொதிந்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதே வாழ்வை இன்னும் சுவாரசியமாக்குகிறது.  இது மனிதருக்குத் தான் என்றில்லை. உலகின் எல்லா உயிர்களுக்கும் பொருந்தும். இந்த காணொளியில் ஒரு கரடிக்குட்டியின் உயிர் போராட்டம், பதைபதைப்பை தாண்டி பல படிப்பினைகளை நமக்கு தருகிறது. இது முழுமையான ஒரே வீச்சில் அமைந்த காணொளியாக இல்லாமல் சின்னச் சின்ன எடிட்டிங் மற்றும் சில டிங்கரிங் வேலை செய்யப்பட்டாலும் உணவுக்கான போராட்டத்தை விட உயிருக்கான&#160;&#8230; <a href="http://podhujanam.wordpress.com/2011/09/25/%e0%ae%95%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/">Read&#160;more</a><img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=podhujanam.wordpress.com&amp;blog=12046518&amp;post=301&amp;subd=podhujanam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>வாழ்க்கை தான் எவ்வளவு எதிர்பாராமைகள் நிறைந்தது. நமக்கான மகிழ்ச்சியும் ஆபத்தும் அடுத்தடுத்த வினாடிகளில் பொதிந்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதே வாழ்வை இன்னும் சுவாரசியமாக்குகிறது.  இது மனிதருக்குத் தான் என்றில்லை. உலகின் எல்லா உயிர்களுக்கும் பொருந்தும். இந்த காணொளியில் ஒரு கரடிக்குட்டியின் உயிர் போராட்டம், பதைபதைப்பை தாண்டி பல படிப்பினைகளை நமக்கு தருகிறது. இது முழுமையான ஒரே வீச்சில் அமைந்த காணொளியாக இல்லாமல் சின்னச் சின்ன எடிட்டிங் மற்றும் சில டிங்கரிங் வேலை செய்யப்பட்டாலும் உணவுக்கான போராட்டத்தை விட உயிருக்கான போராட்டம் வலிமை மிக்கது என்பதை பலமாக நிறுபிக்கிறது. கடைசி சில வினாடிகள் மனதை நெகிழச்செய்பவை.</p>
<span style="text-align:center; display: block;"><a href="http://podhujanam.wordpress.com/2011/09/25/%e0%ae%95%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/"><img src="http://img.youtube.com/vi/8N2FXeDHfM8/2.jpg" alt="" /></a></span>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/podhujanam.wordpress.com/301/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/podhujanam.wordpress.com/301/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/podhujanam.wordpress.com/301/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/podhujanam.wordpress.com/301/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/podhujanam.wordpress.com/301/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/podhujanam.wordpress.com/301/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/podhujanam.wordpress.com/301/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/podhujanam.wordpress.com/301/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/podhujanam.wordpress.com/301/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/podhujanam.wordpress.com/301/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/podhujanam.wordpress.com/301/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/podhujanam.wordpress.com/301/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/podhujanam.wordpress.com/301/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/podhujanam.wordpress.com/301/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=podhujanam.wordpress.com&amp;blog=12046518&amp;post=301&amp;subd=podhujanam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://podhujanam.wordpress.com/2011/09/25/%e0%ae%95%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/aa42ef24a4845da532e3f07a49fc70d8?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">pakepa</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>கரைந்து போகும் பெண் குழந்தைகள்</title>
		<link>http://podhujanam.wordpress.com/2011/05/28/%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8/</link>
		<comments>http://podhujanam.wordpress.com/2011/05/28/%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8/#comments</comments>
		<pubDate>Sat, 28 May 2011 02:47:49 +0000</pubDate>
		<dc:creator>ஜானகிராமன்</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>

		<guid isPermaLink="false">http://podhujanam.wordpress.com/?p=269</guid>
		<description><![CDATA[சில மாதங்களுக்கு முன் திருவண்ணாமலை பகுதியில் அலுவல் ரீதியாக ஒரு மருத்துவரிடம் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் பற்றி பேசிக்கொண்டிருந்த போது, இன்னமும் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படும் அவலம் மறைமுகமாக நடந்து வருவதாக குறிப்பிட்டார். அரசு, கர்ப்பகாலத்தில் கருவிலிருக்கும் குழந்தைகள் ஆணா பெண்ணா என்பதை அறிய சட்டபூர்வ தடை செய்து, அவ்வாறு கருவின் பாலினத்தை வெளிப்படுத்தும் ஸ்கேனிங் மையங்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று அறிவித்திருக்கிறது. ஆனாலும் நகரத்தைத் தாண்டி உட்பகுதியில் உள்ள  மையங்கள்&#160;&#8230; <a href="http://podhujanam.wordpress.com/2011/05/28/%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8/">Read&#160;more</a><img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=podhujanam.wordpress.com&amp;blog=12046518&amp;post=269&amp;subd=podhujanam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://podhujanam.files.wordpress.com/2011/05/child.jpg"><img class="aligncenter size-full wp-image-270" title="female-inequality-in-india" src="http://podhujanam.files.wordpress.com/2011/05/child.jpg?w=564&#038;h=393" alt="" width="564" height="393" /></a></p>
<p>சில மாதங்களுக்கு முன் திருவண்ணாமலை பகுதியில் அலுவல் ரீதியாக ஒரு மருத்துவரிடம் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் பற்றி பேசிக்கொண்டிருந்த போது, இன்னமும் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படும் அவலம் மறைமுகமாக நடந்து வருவதாக குறிப்பிட்டார். அரசு, கர்ப்பகாலத்தில் கருவிலிருக்கும் குழந்தைகள் ஆணா பெண்ணா என்பதை அறிய சட்டபூர்வ தடை செய்து, அவ்வாறு கருவின் பாலினத்தை வெளிப்படுத்தும் ஸ்கேனிங் மையங்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று அறிவித்திருக்கிறது. ஆனாலும் நகரத்தைத் தாண்டி உட்பகுதியில் உள்ள  மையங்கள் இவற்றை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்றும் கிராமங்களில் இருந்து வரும் ஏழைக்குடும்பங்கள் தங்களது வறுமையை முன்வைத்து ஸ்கேன் மூலம் குழந்தையின் பாலினத்தை அறிந்து பெண் குழந்தையாயிருந்தால் அதனை கருவிலேயே அழிப்பது நிகழ்கிறது என்றும் கவலைபட்டார். அது எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும், அப்போது நான் அதை அவ்வளவு சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை.</p>
<p>ஆனால் சமீபத்தில் 2011 ம் ஆண்டின் சென்செஸ் கணக்கெடுப்பின் முதற்கட்ட புள்ளிவிவரங்களைப் பார்த்தபோது அந்த ஆபத்து நடந்திருக்குமென்று ஊகிக்கமுடிகிறது. அவர் சொன்ன அந்த பயங்கரத்தின் விளைவு புள்ளிவிவரங்களாக வெளிப்பட்டிருந்தது. தமிழ்நாட்டளவில் 14 மாவட்டங்களில் 2001ம் ஆண்டு இருந்ததை விட ஆறு வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகளின் எண்ணிக்கை இப்போது குறைந்துள்ளது. குறிப்பாக கடலுர், அரியலுர், பெரம்பலுர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் முன்னெப்போதும் விட ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் சராசரியாக 1000க்கு 25 என்ற அளவில் குறைந்துள்ளது.</p>
<p>தமிழ்நாடளவில் மொத்த மக்கள்தொகையின் பாலின விகிதம் 1000ம் ஆண்களுக்கு 995 பெண்கள் என்ற நிலையில் இருந்தாலும், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் அளவில் 1000 ஆண்களுக்கு 946 பெண்கள் என்றுள்ளது கவலைக்குறியது. பெண் சிசுவதை அதிகம் இருப்பதாக கருதப்படும் தர்மபுரி, சேலம், தேனி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரளவுக்கு பெண்குழந்தை விகிதம் கடந்த பத்து ஆண்டுகளில் அதிகரித்திருந்தாலும் அங்கும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை மாநில சராசரிக்கும் குறைவாகவே இருக்கின்றன.</p>
<p>இந்தியாவில் 2001 ம் ஆண்டு எடுக்கப்பட்ட சென்சஸ் அறிக்கைப்படி, குழந்தைகள் அளவில் பாலின விகிதம் 927 ஆக இருந்ததது. அது இப்போது 10 புள்ளிகள் குறைந்து இப்போது 917 ஆக பிரதிபளிக்கிறது. இந்த புள்ளிவிவரம், கடந்த 60 ஆண்டுகளாக இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு எடுக்கப்பட்ட எல்லா சென்சஸ் புள்ளிவிவரங்களிலும் பதிவாகிய மிகக்குறைந்த அளவு என்பது மிகவும் வேதனை தரக்கூடிய விஷயம். இதன்மூலம், இந்திய சமூகத்தில் முன்னெப்போதையும் விட இந்த காலகட்டத்தில் பெண்குழந்தைகள் பெரிய ஆபத்தை சந்தித்து வருகிறார்கள் என்றே புரிந்து கொள்ளமுடிகிறது.</p>
<p>இதன்படி, இந்தியாவில் பிறக்கும் 1000 ஆண் குழந்தைகளுக்கு 83 பெண் குழந்தைகள் காணாமல் போகிறார்கள் என்று புரிந்துகொள்ளலாம். ஒரு பெண் குழந்தைக்கு அடிப்படையான பிறப்புக்கான உரிமை மறுக்கப்பட்டுவருவது மிகக்கொடுமையான செய்தி. பொதுவாக இயற்கையின் நியதி படி, 1000 ஆண் குழந்தைகளுக்கு 1036 பெண் குழந்தைகள் பிறப்பதாக அறிவியல் வல்லுனர்கள் சொல்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளில் அதிகபட்ச பெண்குழந்தை பிறப்பு துத்துக்குடியில் 970ஆகவும் நீலகிரியில் 982ஆகவும் இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் தமிழ்நாட்டில் பெண்குழந்தைக்கான முழுபாதுகாப்பு உறுதிசெய்யப்படவில்லை என்று தெரியவருகிறது.</p>
<p>1997களில் சராசரியாக தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் ஒரு மாதத்துக்கு 160 பெண் குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்று ஓர் ஆய்வறிக்கை சொல்கிறது. தற்போது இந்த விகிதம் குறைந்திருந்தாலும் பெண் சிசுவுக்கு முழுமையான பாதுகாப்பு ஏற்படவில்லை. தற்போதய மருத்துவத்துறை தொழில்நுட்ப ரீதியில் பெரிதும் வளர்ந்திருப்பதால் பெண் குழந்தை பிறந்த பிறகு இறக்கும் விகிதம் குறைந்து, கருவிலேயே அழிக்கும் போக்கு அதிகமாகியிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. ஒருவகையில் இதனை வெறும் சமூகப்பிரச்சனை மட்டுமாக எடுத்துக்கொள்ளமுடியாது. பேறுகாலத்தின் நான்காவது மாதத்தில் கருவின் பாலினம் கண்டறியப்பட்டு கருச்சிதைவு நிகழ்த்துதல் தாயின் உயிருக்குக் கூட ஆபத்தாக அமையும் என மருத்துவர்கள் எச்சறிக்கிறார்கள்.</p>
<p>வறுமை மற்றும் சமூக கட்டமைப்புகள் இதற்கு காரணமாக சொல்லப்பட்டாலும் மிக முக்கியமான காரணமாக கருதப்படுவது, விதிமீறலாக நிகழும் செலக்டிவ் அபார்ஷனும் முன்னேற்றப்படவேண்டிய பேறு கால கவனிப்பும் தான். எப்படி பார்த்தாலும் உயிர் கொண்ட ஒரு சிசுவிற்கு தன் வாழ்க்கையை முழுமையாக வாழ சகல உரிமையும் இருக்கிறது. அதனை பாலினக்காரணங்களுகாக கரைப்பது பாவம். இது மூன்று வித உரிமை மீறலாக கருத்தப்படவேண்டும். 1.மனித உரிமை மீறல், 2. குழந்தை உரிமை மீறல், 3. பெண்ணுரிமை மீறல். இந்த நிலைக்கு அரசாங்கமும் பொறுப்பெடுக்கவேண்டும். முதலமைச்சராக, ஜனாதிபதியாக பெண்கள் இருப்பது மட்டும் பாலின சமத்துவத்துக்கான குறியீடாகாது. இந்தியா உலக அளவில் வல்லரசாவது ஒரு பக்கம் இருக்கட்டும், முதலில் நமது பூமியில் பூக்கும் ஒவ்வொறு பெண்குழந்தையும் முழுமையாக, ஆரோக்கியத்துடன் மலரவழி செய்யட்டும்.</p>
<p>இந்திய அளவில் தனிநபர் வருமானம் மிக அதிகம் இருக்கும் மாநிலங்களான பஞ்சாப் (846), ஹரியானா (830) ஆகிய மாநிலங்களில் தான் பெண் குழந்தை பாலின விகிதம் மிகக்குறைவாக இருக்கிறது. அதே போல வளர்ச்சி அடையாத, பிரச்சனைகள் மிகுந்த மாநிலங்களாக கருதப்படும் மிசோரம் (971), மேகாலயா (970) ஆகிய வடகிழக்கு மாநிலங்கள் அதிக பாலின விகிதத்தை கொண்ட முதல் இரண்டு மாநிலங்களாக நிலைபெற்றுள்ளன. இந்த புள்ளிவிவரம், வளர்ச்சி என்பது வெறும் ரிசர்வ் வங்கி அச்சடிக்கும் காகிதம் மட்டும் தானா அல்லது சமநிலைச்சமுதாயமா என்ற அடிப்படை கேள்வியை நம்முன் வைக்கிறது.</p>
<p>இதன் தாக்கம் அடுத்த 20 ஆண்டுகளில் தெரியவரும். பாலினம் சமநிலையில் இல்லாத சமூகம் நிச்சயம் நொண்டியடிக்கும். அப்போது நாம் செய்த தவறு தெரியவரும். கலர் டீவி, மிக்ஸியை விட பெண் குழந்தைகள் முக்கியம் என்று உணர ஆரம்பிப்போம்.</p>
<p>குறிப்பு: மேலுமதிக விவரங்களுக்கு: <a href="http://www.census.tn.nic.in/whatsnew/ppt_total2011.pdf">http://www.census.tn.nic.in/whatsnew/ppt_total2011.pdf</a></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/podhujanam.wordpress.com/269/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/podhujanam.wordpress.com/269/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/podhujanam.wordpress.com/269/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/podhujanam.wordpress.com/269/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/podhujanam.wordpress.com/269/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/podhujanam.wordpress.com/269/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/podhujanam.wordpress.com/269/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/podhujanam.wordpress.com/269/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/podhujanam.wordpress.com/269/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/podhujanam.wordpress.com/269/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/podhujanam.wordpress.com/269/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/podhujanam.wordpress.com/269/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/podhujanam.wordpress.com/269/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/podhujanam.wordpress.com/269/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=podhujanam.wordpress.com&amp;blog=12046518&amp;post=269&amp;subd=podhujanam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://podhujanam.wordpress.com/2011/05/28/%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8/feed/</wfw:commentRss>
		<slash:comments>8</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/aa42ef24a4845da532e3f07a49fc70d8?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">pakepa</media:title>
		</media:content>

		<media:content url="http://podhujanam.files.wordpress.com/2011/05/child.jpg" medium="image">
			<media:title type="html">female-inequality-in-india</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அவர்கள் அறியாமையிலேயே இருக்கட்டும்.</title>
		<link>http://podhujanam.wordpress.com/2011/05/25/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87%e0%ae%af%e0%af%87-%e0%ae%87%e0%ae%b0/</link>
		<comments>http://podhujanam.wordpress.com/2011/05/25/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87%e0%ae%af%e0%af%87-%e0%ae%87%e0%ae%b0/#comments</comments>
		<pubDate>Wed, 25 May 2011 06:28:52 +0000</pubDate>
		<dc:creator>ஜானகிராமன்</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>

		<guid isPermaLink="false">http://podhujanam.wordpress.com/?p=274</guid>
		<description><![CDATA[திருத்தணிக்குப் பக்கத்தில் பனப்பாக்கம் என்ற கிராமத்திலிருக்கும் விவசாயி வடிவேலு அய்யா.  ஒருமுறை இவரது கிராமத்தில் ஏரி மதகை சரி செய்வதற்காக 1.5 இலட்சம் ரூபாயில் காண்ட்ராக்ட் விட்டிருக்கிறார்கள். காண்ட்ராக்ட் எடுத்தவர் பெயருக்கு வேலை செய்துவிட்டு மிச்ச பணத்தை சுருட்டியிருக்கிறார். இதை கேள்வி பட்ட வடிவேலு அய்யா, அவருடன் சண்டை போட்டிருக்கிறார். முதலில் அவர்கள் கொஞ்ச பணத்தை இவருக்கு லஞ்சமாக கொடுப்பதற்கு பேரம் பேசியிருக்கிறார்கள். இவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு மிரட்டியும் பார்த்திருக்கிறார்கள். இவர் மசியவில்லை. ஒரு புகார்&#160;&#8230; <a href="http://podhujanam.wordpress.com/2011/05/25/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87%e0%ae%af%e0%af%87-%e0%ae%87%e0%ae%b0/">Read&#160;more</a><img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=podhujanam.wordpress.com&amp;blog=12046518&amp;post=274&amp;subd=podhujanam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://podhujanam.files.wordpress.com/2011/05/dsc00261.jpg"><img class="aligncenter size-full wp-image-275" title="Vadivel" src="http://podhujanam.files.wordpress.com/2011/05/dsc00261.jpg?w=640&#038;h=480" alt="" width="640" height="480" /></a></p>
<p>திருத்தணிக்குப் பக்கத்தில் பனப்பாக்கம் என்ற கிராமத்திலிருக்கும் விவசாயி வடிவேலு அய்யா.  ஒருமுறை இவரது கிராமத்தில் ஏரி மதகை சரி செய்வதற்காக 1.5 இலட்சம் ரூபாயில் காண்ட்ராக்ட் விட்டிருக்கிறார்கள். காண்ட்ராக்ட் எடுத்தவர் பெயருக்கு வேலை செய்துவிட்டு மிச்ச பணத்தை சுருட்டியிருக்கிறார். இதை கேள்வி பட்ட வடிவேலு அய்யா, அவருடன் சண்டை போட்டிருக்கிறார். முதலில் அவர்கள் கொஞ்ச பணத்தை இவருக்கு லஞ்சமாக கொடுப்பதற்கு பேரம் பேசியிருக்கிறார்கள். இவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு மிரட்டியும் பார்த்திருக்கிறார்கள். இவர் மசியவில்லை. ஒரு புகார் மனு தயாரித்து, ஊரில் இருக்கும் 130 விவசாயிகளிடம் கையெழுத்து வாங்கி கலெக்டரிடம் கொடுக்க போனார். கலெக்டரின் உதவியாளர், &#8220;இப்போது கலெக்டரை பார்க்கமுடியாது. வேண்டுமானால் என்னிடம் கொடுத்துவிட்டு போங்கள்&#8221; என்று சொல்ல, இவர் மறுத்து பிடிவாதமாக கலெக்டரை பார்க்கவேண்டும் என்று வலியுருத்தியிருக்கிறார்.</p>
<p>கலெக்டர் அலுவலகத்தில் இருந்தவர்கள் போலிஸை கூப்பிட்டு ஜெயிலில் போடுவேன் என்று சொல்லி இவரை மிரட்டியிருக்கிறார்கள். இவர், “இந்தியா சுதந்திரம் அடைவதற்காக காந்தி, நேரு போன்றவர்கள் ஜெயிலுக்கு போயிருக்கிறார்கள். நான், என்னுடைய கிராமத்து ஏரிக்காக ஜெயிலுக்கு போகவேண்டியிருந்தால் சந்தோஷமாக போகிறேன்” என்ற சொல்லிவிட்டு அங்கேயே உட்கார்ந்து விட்டார். இந்த சச்சரவை உள் அறையிலிருந்து கேட்ட கலெக்டர், அவரைக் கூப்பிட்டு விவரம் கேட்டு பிறகு அந்த காண்ட்ராக்டர் மீது உரிய நடவடிக்கை எடுத்தார். இப்போது அந்த மதகு, அந்த ஊரில் உள்ள 150 விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு பயன்பட்டுவருகிறது.</p>
<p>ஆள் பலம், பண பலம் என எதுவும் இல்லாத எளிமையான விவசாயியான வடிவேலு அய்யா ஊர் நலத்துக்காக தனி ஆளாக போராடிய குணம் என்னை ஆச்சரியப்படுத்தியது. இது போல ஊர் நலனுக்கான பல விஷயங்களில் யாருடைய உதவியும் இல்லையென்றாலும் அவர் தனியாளாக தன்னால் முடிந்தததை மனமாற செய்துவருகிறார். இதை அவர் தம்பட்டம் அடித்துக்கொள்வதும் இல்லை தான் பெரிய சமூக சேவகன் என்று கூறிக்கொள்வதுமில்லை.</p>
<p>இதேபோல தேனி மாவட்டம், கடமலைக்குண்டு கிராமத்தின் கிராமக் கமிட்டி பொருளாளராக இருந்தவர் வண்டப்புலி நாடார். (வண்டப்புலி நாடார் என்பது அவரது பெயர் அல்ல.  வண்டப்புலியிருருந் இடம் பெயர்ந்தவர்). சிறிய அளவில் பலசரக்கு கடையும் வைத்திருந்தார்.  கிராம கமிட்டி சார்பாக இவரிடம் ஒப்படைக்கப்பட்ட பணம் அப்படியே இருக்கும்.  ரூபாய் நோட்டுகளின் எண்ணை கூட சரிபார்த்துக் கொள்ளலாம். பல்வேறு சாதியினரும் மதத்தவரும் வசிக்கும் கடமலைக்குண்டில் நாடார் சமூகத்தின் எண்ணிக்கை குறைவு. இருப்பினும் தொடர்ச்சியாக பொருளாளராக இருந்தவர்.</p>
<p>திருவிழாவிற்கு கிராமத்தின் சார்பாக பலசரக்கு வாங்குவதாக இருந்தால் கூட தனது கடையில் வாங்குவதை தவிர்த்தவர். தேனியில் இந்தக் கடையில் வாங்குங்கள். இங்கு விலை குறைவாக இருக்கும் என்று தகவல் சொல்லிவிட்டு கண்ணியமாக ஒதுங்கிக் கொள்வார். வருடந்தோறும் திருவிழா முடிந்ததும் கணக்கு ஒப்படைப்பது வழக்கம். ஒருமுறை இதுபோல திருவிழா முடிந்து ஊர்மக்களிடம் கணக்கு ஒப்படைக்கும் நாளில், குடிகாரன் ஒருவன் போதையில் &#8220;வண்டப்புலி நாடார் புது வீடு கட்டுறாரே! எப்படி &#8217;எல்லாம் கிராமத்துப் பணம் தான்&#8217; &#8220;ன்னு கேட்டுட்டான். அந்தக் கணமே தனது பதவியைத் துறந்தார். (தன்தரப்பு நியாயத்துக்காக வருடக் கணக்கில் விவாதிக்கவில்லை, வாய்தா வாங்கவில்லை) கணக்கினை பைசா சுத்தமாக ஊர் மக்களிடம் ஒப்படைத்தார்.</p>
<p>அடுத்த நாள் கிராமத்து பெரியவர்கள் எல்லாம் வீட்டிற்கு சென்று நீங்கதான் பொருளாளராக இருக்கனும் &#8217;அவன் என்னமோ தண்ணியைப் போட்டு ஒலறிட்டான்&#8217;எவ்வளவோ சமதானம் சொன்னாங்க. முன்பு குற்றம் சுமத்தியவனும், &#8220;நான் ஏதோ நேத்து தெரியமா போதையில அப்படி கேட்டுட்டேன், என்னை மன்னிச்சிருங்க நீங்கதான் பொருளாளராக வரனுமு&#8221;ன்னு அவர் காலில் விழுந்தான். இருந்தும் இவர் சம்மதிக்கவில்லை. &#8220;நீ சந்தேகப் படும்படி என்னுடைய ஏதோ ஒரு செயல் உனக்கு தெரிந்திருக்கிறது. அதனால்தான் நீ அப்படி கேட்டாய். சந்தேகப்படும்படியான ஆள் பொறுப்பில் இருப்பது அவ்வளவு நல்லதில்லை&#8221; என அனைவரையும் இன்முகத்தோடு அனுப்பிவிட்டார்.</p>
<p>இரண்டொரு நாள் அதே வேதனையில் இருந்தவர் இறந்துவிட்டார்.  இறப்பிற்கு முன் வண்டப்புலி நாடார் தம்குடும்பத்தாருக்கு சொன்ன வார்த்தைகள் &#8220;நம் குடும்பத்தில் இருந்து யாரும் கிராமப் பொறுப்பிற்கு வரக்கூடாது. ஆனால் கிராமத்திற்கு செலுத்த வேண்டிய முதல் வரி நம்முடையதாகத்தான் இருக்க வேண்டும்&#8221;.  இதனால் தான் அவர் இறந்து 10 வருடங்களாகியும் உள்ளுர் மக்களால் உதாரணமாய் வாழ்கிறார். இன்றைக்கு பொது வாழ்வில் ஈடுபடுவர்களுக்கு எத்தனை பெரியவர் வண்டப்புலி நாடார்.</p>
<p>இல்லாதவர்கள், ஏதுமற்றவர்கள் நேர்மையாகத்தான் இருக்கின்றனர்.  ஒரு ஏழையோ, கிராமத்து விவசாயியோ எளிதாக பொய் சொல்வதில்லை. நீதி நூல்களை படித்தவர்கள், நீதிகளை மேடைகளில் முழங்குபவர்கள்தான் திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் நமக்கு முன்னே போலிகளாய் நிற்கிறார்கள். மிக எளிமையாக, தன்னைச்சுற்றி நல்லது நடக்கப் போராடும் இவருக்கு ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த், ஆகாஷ் குடியிருப்பு ஊழல்கள் பற்றியோ, தேசிய அரசியலின் விளையாட்டுகள் பற்றியோ அதிகம் தெரியாது. அது தெரியாமல் இருப்பதாலேயே அவருடைய ஆன்ம பலம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. அவர்கள் அறியாமையிலேயே இருக்கட்டும்.</p>
<p><em>(வண்டப்புலி நாடார் பற்றிய தகவல் பகிர்ந்துகொண்ட திரு.கண்ணனுக்கு நன்றி)</em></p>
<div></div>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/podhujanam.wordpress.com/274/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/podhujanam.wordpress.com/274/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/podhujanam.wordpress.com/274/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/podhujanam.wordpress.com/274/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/podhujanam.wordpress.com/274/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/podhujanam.wordpress.com/274/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/podhujanam.wordpress.com/274/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/podhujanam.wordpress.com/274/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/podhujanam.wordpress.com/274/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/podhujanam.wordpress.com/274/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/podhujanam.wordpress.com/274/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/podhujanam.wordpress.com/274/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/podhujanam.wordpress.com/274/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/podhujanam.wordpress.com/274/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=podhujanam.wordpress.com&amp;blog=12046518&amp;post=274&amp;subd=podhujanam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://podhujanam.wordpress.com/2011/05/25/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87%e0%ae%af%e0%af%87-%e0%ae%87%e0%ae%b0/feed/</wfw:commentRss>
		<slash:comments>18</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/aa42ef24a4845da532e3f07a49fc70d8?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">pakepa</media:title>
		</media:content>

		<media:content url="http://podhujanam.files.wordpress.com/2011/05/dsc00261.jpg" medium="image">
			<media:title type="html">Vadivel</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>டீ பிரேக் 1</title>
		<link>http://podhujanam.wordpress.com/2011/04/10/%e0%ae%9f%e0%af%80-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%95%e0%af%8d-1/</link>
		<comments>http://podhujanam.wordpress.com/2011/04/10/%e0%ae%9f%e0%af%80-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%95%e0%af%8d-1/#comments</comments>
		<pubDate>Sun, 10 Apr 2011 13:08:26 +0000</pubDate>
		<dc:creator>ஜானகிராமன்</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>

		<guid isPermaLink="false">http://podhujanam.wordpress.com/?p=256</guid>
		<description><![CDATA[[டீ பிரேக் என்பது, ஒரு தொகுப்புப் பதிவு. எனக்குத் தெரிந்த, படித்த பல சின்னச்சின்ன விஷயங்கள் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள கிடைத்த வாய்ப்பு. வாரம் ஒருமுறை எழுதலாம் என்றிருக்கிறேன். பார்க்கலாம். ] &#160; ஒரு கதை&#8230; புத்தரும் அவருடைய சீடரும் ஒரு ஊரைத் தாண்டி சென்றுகொண்டிருந்தனர். அந்த ஊரில் உள்ளவர்கள் புத்தரை கண்டபடி திட்டிக்கொண்டிருந்தனர். அவரை அசிங்கப்படுத்தினர். ஆனால் புத்தர் எந்த எதிர்வினையும் செய்யாமல் அமைதியாக சென்றுகொண்டிருந்தார். அவருடைய சீடருக்கு இது அடங்காத கோபத்தை ஏற்படுத்தியது. அவர் மக்களை பார்த்து பதிலுக்குத் திட்டினார்.&#160;&#8230; <a href="http://podhujanam.wordpress.com/2011/04/10/%e0%ae%9f%e0%af%80-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%95%e0%af%8d-1/">Read&#160;more</a><img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=podhujanam.wordpress.com&amp;blog=12046518&amp;post=256&amp;subd=podhujanam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align:center;"><em>[டீ பிரேக் என்பது, ஒரு தொகுப்புப் பதிவு. </em></p>
<p style="text-align:center;"><em>எனக்குத் தெரிந்த, படித்த பல சின்னச்சின்ன விஷயங்கள் பற்றி </em></p>
<p style="text-align:center;"><em>உங்களுடன் பகிர்ந்து கொள்ள கிடைத்த வாய்ப்பு. </em></p>
<p style="text-align:center;"><em>வாரம் ஒருமுறை எழுதலாம் என்றிருக்கிறேன். பார்க்கலாம். ]</em></p>
<p style="text-align:left;">&nbsp;</p>
<p style="text-align:left;"><strong>ஒரு கதை&#8230;</strong></p>
<p style="text-align:center;"><a href="http://podhujanam.files.wordpress.com/2011/04/bh-001.jpg"><img class="aligncenter size-full wp-image-257" title="புத்தா" src="http://podhujanam.files.wordpress.com/2011/04/bh-001.jpg?w=223&#038;h=270" alt="" width="223" height="270" /></a></p>
<p>புத்தரும் அவருடைய சீடரும் ஒரு ஊரைத் தாண்டி சென்றுகொண்டிருந்தனர். அந்த ஊரில் உள்ளவர்கள் புத்தரை கண்டபடி திட்டிக்கொண்டிருந்தனர். அவரை அசிங்கப்படுத்தினர். ஆனால் புத்தர் எந்த எதிர்வினையும் செய்யாமல் அமைதியாக சென்றுகொண்டிருந்தார். அவருடைய சீடருக்கு இது அடங்காத கோபத்தை ஏற்படுத்தியது. அவர் மக்களை பார்த்து பதிலுக்குத் திட்டினார். புத்தரிடம், ”ஏன் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள், தப்பான மக்களை ஏன் சகித்துக்கொள்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டே வந்தான். புத்தர் பதிலேதும் சொல்லாமல், அமைதியாக அந்த சீடனைப்பார்த்து, சிறு புன்முறுவலுடன் தன் உடலில் இருந்த மேல்துண்டை அந்த சீடனுக்கு போர்த்திவிட்டு நடக்க ஆரம்பித்தார்.</p>
<p>இப்போது, மேல்துண்டை தன் மீது புத்தர் ஏன் போர்த்தினார் என்ற குழப்பம் சீடனை ஆக்ரமித்தது. அதிலிருந்து புத்தர் என்ன செய்தியைச் சொல்கிறார் என யோசிக்க ஆரம்பித்தான். யோசித்துக்கொண்டே இருந்தான். அன்று இரவு உறக்கம் கூட அவனுக்கு வரவில்லை. நேராக புத்தரிடம் சென்று இது பற்றிக் கேட்டான். புத்தர், &#8220;நான் துண்டை உன்மீது போர்த்தியதில் எந்த செய்தியும் இல்லை.</p>
<p>உன்னுடைய மனம், மக்களின் திட்டுகளையும் கேலிகளையும் யோசித்துக்கொண்டிருந்தது, அதிலிருந்து திசைதிருப்ப துண்டினை உன் மேல் போர்த்தினேன். அதற்கு பிறகு நீ மக்களை மறந்துவிட்டு, துண்டினைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தாய்&#8221; என்றார்.</p>
<p>&nbsp;</p>
<p><strong>ஒரு காணொளி</strong></p>
<p>தனிமை எப்பவும் கொடுமையானது. இதைப்பார்த்த பிறகு என் அப்பாவிம் மீதான என் அன்பு இன்னும் அதிகரித்தது.</p>
<span style="text-align:center; display: block;"><a href="http://podhujanam.wordpress.com/2011/04/10/%e0%ae%9f%e0%af%80-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%95%e0%af%8d-1/"><img src="http://img.youtube.com/vi/2kpLDkWg5DA/2.jpg" alt="" /></a></span>
<p>&nbsp;</p>
<p><strong>ஒரு செய்தி</strong></p>
<p><a href="http://podhujanam.files.wordpress.com/2011/04/hazare_main.jpg"><img class="aligncenter size-full wp-image-258" title="Hazare_main" src="http://podhujanam.files.wordpress.com/2011/04/hazare_main.jpg?w=400&#038;h=200" alt="" width="400" height="200" /></a></p>
<p><strong><em>யார் இந்த அன்னா ஹசாரே?</em></strong></p>
<p>முன்னால் ராணுவ வீரர். 1965 இந்திய-பாகிஸ்தான் போரில் பங்கெடுத்தவர், காந்தியவாதி.</p>
<p><strong><em>என்ன பெரிசா செய்துவிட்டார்?</em></strong></p>
<p>எல்லா நிலைகளிலும் பின்தங்கியிருந்த ராலேகான் சித்தி (அகமது நகர், மகராஷ்டிரா) கிராமத்தை தனிஆளாக பண்பிலும், பொருளாதாரத்திலும் இந்தியாவின் முன்னோடி கிராமமாக மாற்றிக்காட்டியவர்.</p>
<p><strong><em>அதனால என்ன?</em></strong></p>
<p>இப்போது, இந்த கிராமம் முழுமையான சுயசார்புத் தன்மையுடையதாக, மத்திய மாநில அரசின் உதவியில்லையென்றாலும் தன்தேவையை பூர்த்திசெய்துகொள்ளும் வகையில் மாறியுள்ளது. கிராமத்துக்கான மின்சக்தி கிராமத்திலேயே சூரிய, உயிர்ம, காற்று சக்திகளால் உற்பத்திசெய்யப்படுகிறது. 1975ல் வறுமைக்கோட்டுக்கு கீழிருந்த இந்த கிராமம் இப்போது, இந்தியாவின் பொருளாதார வளமிக்க கிராமமாக மாறியுள்ளது.</p>
<p><strong><em>இதெல்லாம் சரி, இவரோட வாழ்க்கை, வசதிகள் பற்றி&#8230;</em></strong></p>
<p>இந்த மாற்றத்துக்கு காரணமான இவர் தன்னுடைய வாழ்நாள் சேவைக்காக பத்ம பூஷன் விருது பெற்றுள்ளார். இன்றைக்கும், அந்த கிராமத்தில் உள்ள கோவிலுக்கு அருகே 10க்கு 10 இடவசதி கொண்ட ஒரு சிறு அறையில் தான் வாழ்ந்துவருகிறார்.</p>
<p><strong><em>இப்ப எதுக்காக உண்ணாவிரதம் இருக்கார்?</em></strong></p>
<p>நாட்டில் புரையோடிப்போயுள்ள ஊழலை ஒழிக்க சரியான சட்டக்கருவியை (ஜன லோக்பால் சட்டம்) ஏற்படுத்த போராடிக்கொண்டிருக்கிறார்</p>
<p><strong><em>இந்த சட்டம் புதியதான ஒன்றா?</em></strong></p>
<p>இல்லை. 1972லேயே அப்போதய சட்ட அமைச்சர் திரு.சாந்தி பூசனால் கொண்டுவர பரிசீலிக்கப்பட்டது. ஆனா, நமது மாண்புமிகுக்களும் உயர் அதிகாரிகளும் 40 ஆண்டுகளாக கிடப்பில் போட்டு பொதுசொத்தை ஆட்டையை போட்டு வருகின்றனர்</p>
<p><strong><em>இவர் உண்ணாவிரதத்தின் மூலம் குறுகிய காலத்தில் இதை சட்டமாக்க அரசை நிர்பந்திப்பது சரியா?</em></strong></p>
<p>இப்போதைக்கு அரசிடம் இவர் கேட்டுக்கொள்வது, இந்த சட்டம் நிறைவேற்றப்படும் என்ற அறிக்கை வாயிலான உறுதிமொழியைத் தான். அடுத்து, இந்த சட்டவரைவை மேற்கொள்ள 50% அரசு அதிகாரிகளும் 50% மக்கள் அமைப்புப் பிரதிநிதிகளும் அடங்கிய ஒரு குழு அமைக்கப்படவேண்டும் என்பது.</p>
<p><em><strong>இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் என்ன நிகழும்?</strong></em></p>
<p>இதன் மூலம் தேர்தல் ஆணையம் போன்ற சுதந்திரத்தன்மையுடன் இயங்கும் மத்தியில் லோக்பால், மாநிலங்களில் லோக்அயுக்தா அமைப்புகள் ஏற்படுத்தப்படும். ஊழல் குற்றம் சாட்டப்படுபவர் எவ்வளவு பெரிய அதிகாரியாகவோ, எவ்வளவு பெரிய அரசியல்வாதியாகவோ இருந்தாலும் 1 வருடத்துக்குள் விசாரிக்கப்பட்டு 2 வருடங்களுக்குள் தீர்ப்பும் தண்டனையும் வழங்க சட்டபூர்வ வழி ஏற்படும்.</p>
<p><strong><em>இந்த சட்டத்தால் மட்டுமே இந்தியா ஊழலற்ற தேசமாகிவிடுமா?</em></strong></p>
<p>தகவல் பெறும் உரிமை சட்டம் போல இந்த சட்டமும் வெளிப்படையான நிர்வாகத்தை உண்டாக்க உதவும் ஒரு கருவி மட்டுமே. இது நடைமுறைப்படுத்தப்பட்டால் கண்டிப்பாக இப்போதைக்கு இருக்கும் ஊழல் விசாரணை முறைகள் இன்னும் மேம்படும். இதில் சந்தேகமே இல்லை.</p>
<p><em><strong>அன்னா ஹசாரே மட்டுமே இதற்காக போராடுகிறாரா?</strong></em></p>
<p>அவருடன் இப்போது, சமூக ஆர்வலர்களான பாபா ஆம்தே, சுவாமி அக்னிவேஷ், அர்விந் கெஜ்ரிவால், கிரண்பேடி போன்றவர்களும் இணைந்திருக்கிறார்கள். இன்னும் பல நல்ல உள்ளங்கள் இணைந்து போரட வந்துகொண்டிருக்கின்றன.</p>
<p><strong><em>சரி, நான் என்ன செய்யமுடியும்?</em></strong></p>
<p>இந்த விஷயத்தைப் பற்றி, நம் நண்பர்கள், உறவினர் வட்டத்தில் பேசலாம். இந்த செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். விருப்பமும் வாய்ப்பும் இருந்தால், நமது பகுதியில் இது பற்றிய விழிப்புணர்வை பிரசாரத்தை மேற்கொள்ளலாம். எதுவும் முடியாதென்றால், அன்னா ஹசாரேவின் உடல் நலம் மேம்பட பிரார்த்தனையாவது செய்யலாம்.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/podhujanam.wordpress.com/256/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/podhujanam.wordpress.com/256/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/podhujanam.wordpress.com/256/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/podhujanam.wordpress.com/256/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/podhujanam.wordpress.com/256/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/podhujanam.wordpress.com/256/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/podhujanam.wordpress.com/256/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/podhujanam.wordpress.com/256/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/podhujanam.wordpress.com/256/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/podhujanam.wordpress.com/256/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/podhujanam.wordpress.com/256/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/podhujanam.wordpress.com/256/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/podhujanam.wordpress.com/256/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/podhujanam.wordpress.com/256/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=podhujanam.wordpress.com&amp;blog=12046518&amp;post=256&amp;subd=podhujanam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://podhujanam.wordpress.com/2011/04/10/%e0%ae%9f%e0%af%80-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%95%e0%af%8d-1/feed/</wfw:commentRss>
		<slash:comments>12</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/aa42ef24a4845da532e3f07a49fc70d8?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">pakepa</media:title>
		</media:content>

		<media:content url="http://podhujanam.files.wordpress.com/2011/04/bh-001.jpg" medium="image">
			<media:title type="html">புத்தா</media:title>
		</media:content>

		<media:content url="http://podhujanam.files.wordpress.com/2011/04/hazare_main.jpg" medium="image">
			<media:title type="html">Hazare_main</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தமிழின் இயக்குனர்களும் ரசிகர்களும்</title>
		<link>http://podhujanam.wordpress.com/2011/03/04/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0/</link>
		<comments>http://podhujanam.wordpress.com/2011/03/04/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0/#comments</comments>
		<pubDate>Fri, 04 Mar 2011 03:21:25 +0000</pubDate>
		<dc:creator>ஜானகிராமன்</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[இயக்குனர்]]></category>
		<category><![CDATA[உலகதிரைப்படம்]]></category>

		<guid isPermaLink="false">http://podhujanam.wordpress.com/?p=241</guid>
		<description><![CDATA[15 வருஷத்துக்கு முன்பு குமுதத்தில் வந்த கட்டுரை ஞாபகத்துக்கு வருகிறது. சென்னையையே பார்க்காத கிராமத்து மனிதரை சென்னைக்கு கூட்டிவந்து, ஊர் சுற்றிக்காட்டி அவருடைய ரியாக்ஷன்களை பதிவுசெய்திருந்தார்கள். அதில் ஒரு அங்கமாக சினிமா படபிடிப்பினை பார்வையிடவைத்திருந்தனர். அந்த டைரக்டரை தயங்கித் தயங்கி கிராமத்தவர், &#8220;சினிமாவை எப்படி 3 மணி நேரத்தில் எடுக்கமுடியுது?&#8221; என்று கேட்ட அவரின் கேள்வி நமது மக்கள் எவ்வளவு அப்பாவியாக இருக்கிறார்கள் என்பதை உணர்த்தியது. பொதுஜனங்களிடையே சினிமா பற்றி இருக்கும் இது போன்ற மாயவியப்பின் விளைவாகவே&#160;&#8230; <a href="http://podhujanam.wordpress.com/2011/03/04/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0/">Read&#160;more</a><img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=podhujanam.wordpress.com&amp;blog=12046518&amp;post=241&amp;subd=podhujanam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://podhujanam.files.wordpress.com/2011/03/raavanan-tamil-movie-poster.jpg"><img class="aligncenter size-full wp-image-242" title="Raavanan-tamil-movie-poster" src="http://podhujanam.files.wordpress.com/2011/03/raavanan-tamil-movie-poster.jpg?w=497&#038;h=270" alt="" width="497" height="270" /></a></p>
<p>15 வருஷத்துக்கு முன்பு குமுதத்தில் வந்த கட்டுரை ஞாபகத்துக்கு வருகிறது. சென்னையையே பார்க்காத கிராமத்து மனிதரை சென்னைக்கு கூட்டிவந்து, ஊர் சுற்றிக்காட்டி அவருடைய ரியாக்ஷன்களை பதிவுசெய்திருந்தார்கள். அதில் ஒரு அங்கமாக சினிமா படபிடிப்பினை பார்வையிடவைத்திருந்தனர். அந்த டைரக்டரை தயங்கித் தயங்கி கிராமத்தவர், &#8220;சினிமாவை எப்படி 3 மணி நேரத்தில் எடுக்கமுடியுது?&#8221; என்று கேட்ட அவரின் கேள்வி நமது மக்கள் எவ்வளவு அப்பாவியாக இருக்கிறார்கள் என்பதை உணர்த்தியது. பொதுஜனங்களிடையே சினிமா பற்றி இருக்கும் இது போன்ற மாயவியப்பின் விளைவாகவே சினிமாவின் கதாநாயகர்கள் நம்மை ஆள்வதும், கடவுளாகுவதும் நிகழ்கிறது. ஆனால் காலம் எல்லா மாயத்தையும் கட்டுடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. நிச்சயம் இன்றைய தேதிக்கு தமிழ் ரசிகன் இவ்வளவு அப்பாவியாக இல்லை. அவன் சினிமா எது நிஜம் எது என்பதை குறைந்தபட்ச அளவிலாவது புரிந்து வைத்துள்ளான். சினிமா தரும் குச்சிமிட்டாய்க்கும் குருவிரொட்டிக்கும் மயங்குவதில்லை. இதற்க்கெல்லாம் அடிப்படை காரணம், உலகமயமாக்கலால் பெருமளவில் அன்னிய மொழிப்படங்களின் பரிட்சயம் ஏற்பட்டதும் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் ஏற்பட்ட இண்டர்நெட்டின் வீச்சும் தான். இது சராசரி ரசிகனுக்கு சினிமா பற்றிய பலவித சாய்ஸ்களை ஏற்படுத்தியுள்ளது. நேர்மையான கதை, திறமையான பிரசன்டேஷன் இல்லாத திரைப்படங்கள் குப்பைக்குத் தள்ளப்படும் போக்கு நம் காலத்தில் நிகழ்ந்துவருவதை ஆமோதித்துத்தான் ஆகவேண்டும்.</p>
<p>பொல்லாதவன் படம் வெளிவந்த நேரம். விஜய் டீவியின் மதன் திரைப்பார்வையில், இயக்குனர் வெற்றிமாறன் பொல்லாதவன் படம் பற்றி பேசிக்கொண்டிருந்தார். &#8220;இந்தப்படத்தை பைசைக்கிள் தீவ்ஸ் படத்தின் தழுவல் என்று பேசிக்கறாங்களே&#8230;&#8221; என்ற மதனுடைய கேள்விக்கு வெற்றிமாறன் சற்றுத் தடுமாறித்தான் போனார். தொடர்ந்து பேசிய மதன், &#8220;இல்ல&#8230; இந்த படத்துக்கும் அதுக்கும் தொடர்பிருப்பதாக நான் நினைக்கல&#8221; என்று சொன்னபிறகு, ஆசுவாசமான வெற்றிமாறன், &#8220;சார். பொல்லாதவன் படமும் பைசைக்கிள் தீவ்சும் வேற வேற. அந்த படம் கிளாசிக். அப்படி அந்த படம் போல இது இருக்குன்னு சொன்னாங்கன்னா நான் கொடுத்துவைச்சவன்&#8221; என்று சிறு புன்னகையுடன் சொன்னதாக ஞாபகம். பைசைக்கிள் தீவ்சில் சைக்கிள் காணமல் போகிறது. பொல்லாதவனில் பைக் காணாமல் போகிறது. இந்த ஒரு முடிச்சை மட்டும் வச்சிக்கிட்டு அதோட காப்பி தான் பொல்லாதவன் என்று சொல்லும் தமிழின் திரைவிமர்சனக் கலைஞர்களின் ரசனை பயப்படவைக்கிறது. அதே போலத்தான் கஜினி படம் வந்த போது, அது மெமொண்டோவோட காப்பின்னு அடிச்சுவிட்டாங்க. சமீபத்தில் வெளிவந்த யுத்தம் செய் படத்தையும் மெமரிஸ் ஆப் மர்டர் படம்ன்னு சொல்லிக்கிழிக்கிறாங்க. இது போன்ற புரிதலற்ற விமர்சனங்கள் நம்முடைய சினிமா ரசனையின் மொன்னைத்தன்மையையே வெளிப்படுத்துகிறது.</p>
<p><a href="http://podhujanam.files.wordpress.com/2011/03/blog281.jpg"><img class="aligncenter size-full wp-image-243" title="blog281" src="http://podhujanam.files.wordpress.com/2011/03/blog281.jpg?w=285&#038;h=323" alt="" width="285" height="323" /></a><br />
அதே நேரத்தில் நந்தலாலாவுக்கு கிகுஜிரோவிலிருந்து சீன்-பை-சீன் அப்படியே அளவெடுத்து ஜெராக்ஸ போட்டுவிட்டு இது என்னுடைய சொந்தகதை என்று சண்டித்தனம் செய்த மிஷ்கின், டீரெயில்ட் படத்தை அச்சாக தமிழுக்கு பச்சைக்கிளி முத்துச்சரமாக எடுத்துவந்த கௌதம், செல்லுலார் என்ற படத்தை ரெண்டு மூனு பேர் வேறுவேறு நடிகர்களைப் போட்டு தமிழ்படுத்திய விதம் (ஒரு வெர்ஷனில் ரித்திஷ், இன்னொரு வெர்ஷனில் எஸ்.வி.சேகர் மகன் நடித்ததாக ஞாபகம்) ட்சோட்சி படத்தை தமிழ் படுத்திய யோகி படம் (இப்போதைக்கு இவ்வளவு படங்கள் தான் என் ஞாபகத்தில் வருகிறது) போன்றவை சகித்துக்கொள்ளமுடியாதது. இதில் மூலப்படத்துக்கு எந்த கிரெடிட்டும் கொடுக்காமல், என்னமோ, தாங்கள் முட்டுச்சந்தில் மொட்டுவலைய பாத்துப்பாத்து யோசிச்சு எழுதியது போல, a flim byன்னு தன்னோட பெயரை போட்டுக்கொள்வது அயோக்கியத்தனம்.</p>
<p>&nbsp;</p>
<p>இந்த பிரச்சனைகளை தவிர்ப்பதற்காகவே வெற்றிமாறன் ஆடுகளத்தில் பிளிமோகிராபியை வைத்து கேச்சி, அமரோஸ்பெராஸ் என்று ஒரு நீளமான படலிஸ்டை கொடுத்துவிட்டார் என நினைக்கிறேன். கண்டிப்பா அமரோஸ் பெராஸின் நாய்ச்சண்டையை ஆடுகளத்தோடு தொடர்புபடுத்தி எழுதும் வாய்ப்பு குறைவென்றாலும் வாலண்டரியாக தன்னுடைய இன்ஸ்பரேஷன்களை வெளிப்படையாக ஒத்துக்கொண்டது தமிழ்சினிமாவின் பாசிட்டிவ் போக்காகவே பார்க்கத் தோன்றுகிறது. ஒருவகையில் இதை வருங்காலங்களில் தவிர்க்கமுடியாது. இப்பல்லாம் உலகப்படங்கள் பர்மாபாஜாரிலும், டோரண்டிலும் கொட்டிக்கிடக்கிறது. சாதாரண ரசிகர்கள்கூட உலகப்படங்களை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இனிமே நம்ம இயக்குனர்கள் உலகப்படத்தை உல்டா செய்வதை ரொம்ப சுலபமாக கண்டுபிடித்துவிடமுடியும்.<br />
மாறிவரும் சமூக-தொழில்நுட்பச்சூழலில் தமிழ் இயக்குனர்கள் சொந்த கதையை வைத்து படமெடுப்பது மட்டுமே அவர்களை நிலைக்கச்செய்யும் . சொந்த சரக்கு இல்லை, ஜெராக்ஸ் தான் எடுக்கமுடியும்னா முன்கூட்டியே கன்பெஷன் செய்துவிடவேண்டியிருக்கும்.</p>
<p><a href="http://podhujanam.files.wordpress.com/2011/03/directors-chair-clipart.gif"><img class="aligncenter size-full wp-image-244" title="director's chair clipart" src="http://podhujanam.files.wordpress.com/2011/03/directors-chair-clipart.gif?w=358&#038;h=361" alt="" width="358" height="361" /></a></p>
<p>2000ம் ஆண்டுக்கு பிறகு வெளிபட்டு வரிசை கட்டி வரும் புதிய தலைமுறை இயக்குனர்கள்,  மிஷ்கின், வெற்றிமாறன், கௌதம், சுசீந்திரன், சசிகுமார், அமீர், சமுத்திரகனி, ராம், வசந்தபாலன், பிரபுசாலமன், ராதாமோகன், சற்குணம், பாண்டிராஜ், ராசுமாதவன், செல்வராகவன், பாலாஜி சக்திவேல்  (இந்த வரிசை தரமதிப்பீட்டில் அமைந்ததல்ல, எழுதும் போது மனதில் தோன்றிய ரேண்டம் பெயர்கள்) எல்லாரும் தமிழ்சினிமாவின் மிகப் பெரிய நம்பிக்கைகளாக தெரிகிறார்கள். அதற்கான உழைப்பும், தகுதியும் நிச்சயம் இவர்களுக்கு இருக்கிறது. ஆனால், மாறிவரும் சூழலின் தன்மையறிந்து வேற்று மொழிப்படங்களை பிரதியெடுப்பதற்கு பதிலாக நமது மண்ணிலிருந்தும் இலக்கியங்களிலிருந்தும் கதைகளைச் சொல்லத்துவங்கவேண்டும்.</p>
<p>சமீபத்தில் நடுநிசிநாய்கள், யுத்தம் செய், ஈசன் ஆகிய 3 படங்களை தொடர்ச்சியாக பார்க்கநேர்ந்தது. இந்த மூன்று திரைப்படங்களின் கதையின் தளம் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருந்தது. நகரச்சூழலில் இளம்பெண்களுக்குக்கெதிரான பாலியல் வன்முறை, அதைச்சார்ந்த பழிவாங்கல் என்று கதையின் வடிவம் குறுகியிருந்தது. ஆனால் இந்த மூன்று படங்களின் இயக்குனர்னர்களின் இதற்கு முந்தைய படங்கள் வி.தா.வ, நந்தலாலா, சுப்ரமணியபுரம் வெவ்வேறு கதைத்தளத்தில் சொல்லப்பட்டவையாக இருந்தது சுவாரசியம். தொழில்நுட்பமும் திரைமொழிபற்றிய புரிதலும் விரிந்து செல்லச்செல்ல, நமது கதைத் தளத்துக்கான கரு பழிவாங்கல், காதல், வன்முறை என குறுகிக்கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. சினிமாவின் வியாபாரத்தைத் தாண்டி, ரசிகனின் ரசனையை அடுத்தநிலைக்கு எடுத்துச் செல்வது சினிமா பிழைத்திருப்பதற்கான கட்டாயமும் ஆகும். தமக்கான பார்வையாளர்களும் வியாபாரமும் மிகக்குறுகிய அளவே இருந்தாலும் சமரசம் செய்யாத ஆகச்சிறந்த படங்கள் மராத்தி, மலையாளம், வங்காளம் ஆகிய மொழிகளில் வரும் போது, ஒரு தமிழ் சினிமாவுக்கான வியாபார சாத்தியம் 300, 400 கோடிகள் அளவில் இருக்கும் போது (உபயம்: எந்திரன்) அதன் முழுவீச்சை நாம் இன்னும் பயன்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. எப்படி, ஈரானிய, கொரிய திரைப்படங்கள் தம்முடைய தனித்துவமான திரைமொழியால் தமக்கென தனிஇடத்தை உலகத்திரை அரங்கில் பிடித்ததோ, அதே காலம் தமிழுக்கும் வரவேண்டும். இதற்கான பொறுப்பு இயக்குனர்கள், ரசிகர்கள் என இருவருக்குமே இருக்கிறது.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/podhujanam.wordpress.com/241/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/podhujanam.wordpress.com/241/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/podhujanam.wordpress.com/241/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/podhujanam.wordpress.com/241/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/podhujanam.wordpress.com/241/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/podhujanam.wordpress.com/241/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/podhujanam.wordpress.com/241/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/podhujanam.wordpress.com/241/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/podhujanam.wordpress.com/241/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/podhujanam.wordpress.com/241/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/podhujanam.wordpress.com/241/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/podhujanam.wordpress.com/241/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/podhujanam.wordpress.com/241/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/podhujanam.wordpress.com/241/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=podhujanam.wordpress.com&amp;blog=12046518&amp;post=241&amp;subd=podhujanam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://podhujanam.wordpress.com/2011/03/04/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0/feed/</wfw:commentRss>
		<slash:comments>12</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/aa42ef24a4845da532e3f07a49fc70d8?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">pakepa</media:title>
		</media:content>

		<media:content url="http://podhujanam.files.wordpress.com/2011/03/raavanan-tamil-movie-poster.jpg" medium="image">
			<media:title type="html">Raavanan-tamil-movie-poster</media:title>
		</media:content>

		<media:content url="http://podhujanam.files.wordpress.com/2011/03/blog281.jpg" medium="image">
			<media:title type="html">blog281</media:title>
		</media:content>

		<media:content url="http://podhujanam.files.wordpress.com/2011/03/directors-chair-clipart.gif" medium="image">
			<media:title type="html">director's chair clipart</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஓ போடு&#8230;</title>
		<link>http://podhujanam.wordpress.com/2011/02/24/%e0%ae%93-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%81/</link>
		<comments>http://podhujanam.wordpress.com/2011/02/24/%e0%ae%93-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%81/#comments</comments>
		<pubDate>Thu, 24 Feb 2011 10:33:05 +0000</pubDate>
		<dc:creator>ஜானகிராமன்</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>

		<guid isPermaLink="false">http://podhujanam.wordpress.com/?p=232</guid>
		<description><![CDATA[ஓட்டுப் போடு; பிடிக்கலைன்னா 49-ஓ போடு.. (கார்டூன்:http://onegirlathousandwords.wordpress.com/) போனமாதம், ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம். அதையொட்டி, எங்க ஊரில் நிறைய பேனர்கள் ரோட்டரி க்ளப் மூலமாக வைத்திருந்தனர். அவை எல்லாம் வாக்காளர்கள் தேர்தல்களில் வாக்களிப்பது கடமை என வலியுத்தியது. எல்லா சுவரொட்டிகளிலும் எங்கள் மாவட்ட ஆட்சியர், வாக்காளர்கள் நேர்மையாகவும் தவறாமலும் வாக்களிப்பதை வலியுருத்தினார். இதைப்பார்த்த என்னுடைய நண்பன் &#8220;வாக்காளர்களை காசு வாங்காம ஓட்டுப்போடச் சொல்வதற்கு முன் தப்பே செய்யாத நல்ல வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தச்சொல்லனும்”&#160;&#8230; <a href="http://podhujanam.wordpress.com/2011/02/24/%e0%ae%93-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%81/">Read&#160;more</a><img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=podhujanam.wordpress.com&amp;blog=12046518&amp;post=232&amp;subd=podhujanam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align:left;"><strong>ஓட்டுப் போடு; பிடிக்கலைன்னா 49-ஓ போடு..</strong></p>
<p style="text-align:center;"><a href="http://podhujanam.files.wordpress.com/2011/02/vote.jpg"><img class="aligncenter size-full wp-image-233" title="vote" src="http://podhujanam.files.wordpress.com/2011/02/vote.jpg?w=497&#038;h=388" alt="" width="497" height="388" /></a>(கார்டூன்:<a href="http://onegirlathousandwords.wordpress.com/">http://onegirlathousandwords.wordpress.com/</a>)</p>
<p>போனமாதம், ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம். அதையொட்டி, எங்க ஊரில் நிறைய பேனர்கள் ரோட்டரி க்ளப் மூலமாக வைத்திருந்தனர். அவை எல்லாம் வாக்காளர்கள் தேர்தல்களில் வாக்களிப்பது கடமை என வலியுத்தியது. எல்லா சுவரொட்டிகளிலும் எங்கள் மாவட்ட ஆட்சியர், வாக்காளர்கள் நேர்மையாகவும் தவறாமலும் வாக்களிப்பதை வலியுருத்தினார். இதைப்பார்த்த என்னுடைய நண்பன் &#8220;வாக்காளர்களை காசு வாங்காம ஓட்டுப்போடச் சொல்வதற்கு முன் தப்பே செய்யாத நல்ல வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தச்சொல்லனும்” என்று அலுத்துக்கொண்டான். இன்று அரசியல் என்பது பணம் கொழிக்கும் வியாபாரமாக போய்விட்டதையும் அந்த ஊழல் நீரோட்டத்தில் சமீபகாலமாக வாக்காளர்களையும் கலக்கச்செய்யும் பழக்கமும் ஞாபகத்துக்கு வந்தது.</p>
<p>உலக அளவில் எல்லா நாடுகளும் இந்தியாவைப் பார்த்து வியப்பதற்கு அடிப்படை காரணம் நம்முடைய மக்களாட்சித் தன்மையில் பரப்பும் வீச்சும் தான். இந்தியாவில் மட்டும் தான் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் முதல் குடியரசுத் தலைவர் வரை 32 இலட்சத்துக்கும் மேற்பட்ட பதவிகள் வாக்காளர்களின் வோட்டுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படப்படுகிறது. இந்தத் தன்மையே நமது தேர்தல் முறையை மிக வலிமையானதாகவும் அதேசமயத்தில் சிக்கலானதாகவும் ஆக்கியுள்ளது.</p>
<p>நமது தேசத்தை ஜனநாயக தேசம் என்று சொல்வதற்கு இருக்கும் ஒரே காரணம், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நமது ஆட்சியாளர்களை நாம் மத்தியிலும் மாநிலத்திலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கிறோம் என்பது தான். இதோ, இப்போது நமது மாநிலத்திலும் தேர்தல் காலம் ஆரம்பித்துவிட்டது. கூட்டணி பேரங்கள் சீரும்சிறப்புமாக களைகட்டிவிட்டது. வரும் மே மாதம் சட்டசபை தேர்தல், ஜீன் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் என அடுத்த 4 மாதங்களில் இரண்டு முக்கிய தேர்தல்கள் நடைபெறவுள்ள இந்த காலக்கட்டத்தில் நேர்மையான தேர்தல் பற்றிய விவாதத்தை முன்னெடுத்துச் செல்வது அவசியமெனப்படுகிறது.</p>
<p>இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட இன்னும் நமது தேர்தல்களில் 100% வாக்கெடுப்பை உறுதிசெய்யமுடியவில்லை. எந்தத் தேர்தலிலும் சராசரியாக 70% சதவிகித வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்கிறார்கள். அதில் 20% வாக்கு பெற்ற வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. அதாவது, மொத்த வாக்காளர்களில் 30%க்கும் குறைவான பெரும்பான்மை பெற்றவர் கையில் நம் நாட்டின் அடுத்த 5 ஆண்டையும் நமது வாழ்க்கையின் தலைவிதியையும் கொடுக்கிறோம். சாதாரண காய்கறிக்கடையில் கூட நாம் உண்ணும் காய்கறிகளை கீறிப்பார்த்து, முறுக்கிப்பார்த்து, உடைத்துப்பார்த்து, தட்டிப்பார்த்து, முடிந்த அளவுக்கு பேரம் பேசி வாங்கும் நாம், நாட்டின் போக்கினை தீர்மானிக்கும் வாக்குக்கு எந்த முயற்சியும் எடுக்காமல் உதாசினப்படுத்துகிறோம் அல்லது போகிறபோக்கில் எதோ ஒரு கட்சிக்கு ஓட்டளித்துவிட்டு நாடு கெட்டுப்போச்சு, ஊழல் ஊறிப்போச்சு என்று அங்கலாய்க்கிறோம்.</p>
<p>100% வாக்கினை உறுதி செய்யமுடியாததற்கு அரசு மற்றும் மக்கள் ஆகிய இருவரிடமும் தவறுகள் இருக்கின்றன. சோம்பேறித் தனத்தாலும் வாழ்வாதாரத்துக்காக வெளியூர்களுக்கு இடம்பெயர்ந்ததாலும் மக்களில் குறிப்பிடத்தகுந்த சதவீதத்தினர் தமது வாக்குரிமையை பயன்படுத்துவதில்லை. சமீபகாலங்களில் வாக்காளர்கள் தமது, விலைமதிக்கமுடியாத வாக்குரிமையை பணத்துக்காகவும் சலுகைகளுக்காகவும் விற்றுவரும் போக்கும் அதிகரித்துவருகிறது. இவை இரண்டுமே நமது ஜனநாயகத்தின் மீதிருக்கும் கரும்புள்ளிகளாகும். வாக்குரிமையில் அரசின் தவறுகளெனப் பார்த்தால் மூன்று விஷயங்கள் முக்கியமானவை. 1.வாக்காளர் பட்டியல் முழுமையானதாக, சரியானதாக எப்போதுமே இருந்ததில்லை. எல்லா சமயங்களிலும் இறந்தவர் பெயர் நீக்கப்படாமல் இருப்பது, ஒரு நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை இருப்பது, வாக்களிக்கும் வயதினை அடைந்திருந்தாலும் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் முக்கியமானவை. 2.வாக்களிக்கும் நடைமுறை வாக்காளருடைய கடமை என்று வலியுருத்தப்பட்டாலும் அதனை சட்டப்பூர்வ கட்டாயமாக்காமல் இருப்பதால் சோம்பல்தனத்தால் வாக்களிக்க விருப்பாதவர்கள் எண்ணிக்கை குறிப்பிடத்தகுந்தவகையில் இருந்து வருகிறது. 3.மிக முக்கியமாக போட்டியிடும் வேட்பாளர்களில் யாருமே சரியான நபர்களாக இல்லை என்று வாக்காளர் கருதும் பட்சத்தில் அவர் நடுநிலை அல்லது எதிர் வாக்கினை பதிவு செய்யும் நடைமுறை இல்லாதிருப்பது இந்தியத் தேர்தல் முறையின் மிகப் பெரிய பலவீனமாக கருதப்படுகிறது.</p>
<p>&#8220;நிற்கின்ற வேட்பாளர்கள் எல்லாருமே தப்பானவர்கள் இவர்களுக்கு ஓட்டளிப்பதை விட, வீட்டில் உட்கார்ந்து டீவியில் தேர்தல்கால சிறப்பு நிகழ்ச்சிகளை பார்கலாம்&#8221; என்று தேர்தல் சமயத்தில் ஓட்டளிக்காத மக்கள் நிறையபேர் சொல்வார்கள். யோசித்துப்பார்த்தால் அது உண்மையாகத் தான் உள்ளது. எடுத்துக்காட்டாக, எங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருமே ஊழல் பேர்வழிகளாக இருக்கும் பட்சத்தில், அவர்களில் யார் குறைந்த ஊழல் செய்பவரோ அவரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு தான் எனக்குள்ளதே தவிர, அவர்கள் அனைவரையும் நிராகரிக்கும் வாக்கினை பதிவு செய்யும் உரிமை எனக்கு தரப்படவில்லை. இந்த வாய்ப்பு நேர்மையான, நம்பகத்தன்மையுள்ள மக்களாட்சியை நிறுவுவதற்கு மிகவும் அவசியமானதாகும். சரியான நபரை தேர்தலில் நிறுத்தவில்லையென்றால் மக்கள் நிராகரிப்பார்கள் என்ற எண்ணம் அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டால் அவர்கள் மக்களின் ஓட்டினை பெறுவதற்கு சரியான நபர்களை தேர்தலில் நிறுத்தமுற்படுவார்கள். அதன் மூலம் ஒட்டுமொத்த ஜனநாயகத் தலைமைத்துவமும் அரசியல் முறைமையும் மேம்படும் என்பதில் சந்தேகமில்லை.</p>
<p>ஆனால் தற்போதிருக்கும் தேர்தல் நடைமுறையில் மறைமுகமாக இந்த நடுநிலை ஓட்டு தரப்பட்டுள்ளது. இந்திய அரசின் தேர்தல் நடத்தை விதிகள் 1961ன் 49-O விதிமுறையானது, ஒரு வாக்காளர் தமது வாக்கினை எந்த வேட்பாளருக்கும் பதிவு செய்யாமல் வாக்கெடுப்பில் பங்கெடுக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. துரதிருஷ்ட வசமாக இந்த விதிமுறைப் பற்றிய விழிப்புணர்வு வாக்காளர்களிடையே மிகக் குறைவாகவே உள்ளது. இந்த நடைமுறையின் படி, வாக்காளர் தம்முடைய அடையாள அட்டையை உறுதி செய்துகொண்ட பின்னர் வாக்களிக்க செல்வதற்கு முன், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாம் 49 ஓ விதிப்படி எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று கூறவேண்டும். அதன் அடிப்படையில் தேர்தல் நடத்தும் அதிகாரி, இதற்கென தரப்பட்டுள்ள 17 A படிவத்தில் வாக்காளர் பெயர், முகவரி எழுதி வாக்காளருடைய கையொப்பம் அல்லது இடதுகை பெருவிரல் அச்சினை பெற்றுக்கொள்வார். இந்த முறையில், வாக்காளரானவர் தேர்தலில் பங்கெடுத்தது உறுதிசெய்யப்படும் அதே நேரத்தில் வாக்காளரின் விருப்பப்படி அவரது ஓட்டு எந்த வேட்பாளருக்கும் கிடைக்கப்படமாட்டது.</p>
<p>எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு நாம் உணர்த்த வேண்டும். அதற்கு சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும். அரசியலே சரியில்லை என்று அலுத்துக் கொண்டு நாம் ஓட்டு போடாமல் இருந்தால், அதனால் அரசியல் கட்சிகளுக்கு எந்த நஷ்டமும் கிடையாது. ஆனால் 49 ஓவின் கீழ் நம்முடைய ஓட்டைப் பதிவு செய்தால் நமது அதிருப்தியை அவர்களுக்குத் தெரியப்படுத்த முடிகிறது. ஒருவேளை ஒரு குறிப்பிட்ட தொகுதியில் பதிவாகும் மொத்த ஓட்டுகளில் அதிகபட்ச ஓட்டுகள் 49ஓவின் கீழ் பதிவுசெய்யப்பட்டிருந்தால் அந்த தொகுதிக்கு மறு தேர்தல் நிகழ்த்தவும் வாய்ப்புள்ளது.</p>
<p>அதேநேரத்தில், அரசியல் சட்டப்படி நாம் தெரிவிக்கும் வாக்கு ரகசியமானது, யாருக்கும் தெரியவராது என்பது வாக்காளருக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமையாகும். ஆனால் துரதிருஷ்டவசமாக 49 ஓவை ரகசியமாகப் பதிவு செய்யமுடியாமல் பொதுவில் தெரிவிக்கும் வகையில் வைத்திருப்பது வாக்காளருக்கு அளிக்கப்பட்டுள்ள இரகசியத்தன்மையையே கேலிக்குறியதாக ஆக்கிவிடுகிறது. அடிப்படையில் இந்த முறையானது சட்டப்படி தவறாகும். இதையும் ரகசிய வாக்காக அளிக்கும் விதத்தில் மின் வாக்கு இயந்திரத்தில் 49 ஓவுக்கு ஒரு தனி பொத்தானை வரும் தமிழக சட்ட மன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி வாக்காளர்களின் நம்பகத்தன்மையையும் மக்களாட்சியின் உண்மையான மாண்பையும் உறுதிசெய்ய வேண்டும்.</p>
<p>தன்னார்வ அமைப்புகள், இணையதள பதிவர்கள், ஊடகங்கள் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவேண்டும். மின் வாக்கு எந்திரத்திலேயே 49 ஓவுக்கான பொத்தானை வைக்க வலியுருத்தும் அதே நேரத்தில், சுவரொட்டிகள் மூலமாகவும் விழிப்புணர்வு முகாம்கள் மூலமாகவும் மக்களிடையே இது போன்ற வாய்ப்பிருப்பது பிரபலப்படுத்தவேண்டும். அப்போது தான் ‘இனி நேர்மையான அரசியல், நல்ல வேட்பாளர்கள் இல்லாவிட்டால் மக்கள் ஆதரவு கிடைக்காது’ என்ற செய்தி அரசியல்வாதிகளின் பொட்டில் உறைக்கும். பூனைக்கு கட்டவேண்டிய மணி நம் கையில் உள்ளது. எப்போது கட்ட ஆரம்பிப்போம்?</p>
<p>குறிப்பு: பதிவர்கள் தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தைப்பற்றியும் இந்த 49 O விதிமுறைப் பற்றியும் ஒரு பதிவாவது எழுதி, ஜனநாயகத்தை வலுப்படுத்துங்களேன்.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/podhujanam.wordpress.com/232/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/podhujanam.wordpress.com/232/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/podhujanam.wordpress.com/232/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/podhujanam.wordpress.com/232/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/podhujanam.wordpress.com/232/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/podhujanam.wordpress.com/232/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/podhujanam.wordpress.com/232/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/podhujanam.wordpress.com/232/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/podhujanam.wordpress.com/232/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/podhujanam.wordpress.com/232/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/podhujanam.wordpress.com/232/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/podhujanam.wordpress.com/232/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/podhujanam.wordpress.com/232/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/podhujanam.wordpress.com/232/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=podhujanam.wordpress.com&amp;blog=12046518&amp;post=232&amp;subd=podhujanam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://podhujanam.wordpress.com/2011/02/24/%e0%ae%93-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>16</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/aa42ef24a4845da532e3f07a49fc70d8?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">pakepa</media:title>
		</media:content>

		<media:content url="http://podhujanam.files.wordpress.com/2011/02/vote.jpg" medium="image">
			<media:title type="html">vote</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பசியுடனிரு, முட்டாளாயிரு&#8230;</title>
		<link>http://podhujanam.wordpress.com/2010/10/11/%e0%ae%aa%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/</link>
		<comments>http://podhujanam.wordpress.com/2010/10/11/%e0%ae%aa%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/#comments</comments>
		<pubDate>Mon, 11 Oct 2010 02:53:07 +0000</pubDate>
		<dc:creator>ஜானகிராமன்</dc:creator>
				<category><![CDATA[புத்தகம்]]></category>
		<category><![CDATA[மேலாண்மை]]></category>
		<category><![CDATA[ஆனந்த விகடன்]]></category>
		<category><![CDATA[ஐஐஎம்]]></category>
		<category><![CDATA[சுயமுன்னேற்றம்]]></category>
		<category><![CDATA[ராஷ்மி பன்சால்]]></category>
		<category><![CDATA[ஸ்டே ஹங்ரி ஸ்டே ஃபூலிஷ்]]></category>

		<guid isPermaLink="false">http://podhujanam.wordpress.com/?p=218</guid>
		<description><![CDATA[சென்ற மாதம், கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்னுடைய வண்டிக்காக காத்துக்கொண்டிருந்தேன். அரைமணிநேரம் ஆகியும் வண்டி வரவில்லை. டீ குடிக்க பர்சை துழாவியபோது, ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டு மட்டும் இருந்தது. சில்லரையில்லாமல் நம்ம ஊர் பஸ்ஸில் ஏறினால், கண்டக்டர், ஏதோ நாம் சில்லரையில்லாமல் பயணம் செய்யவே நேர்ந்து விட்டு வருவதைப்போல, இளக்காரமாக ஒரு பார்வை பார்த்து டிக்கட்டின் பின்புறம் 500/1 என்று எழுதிக் கொடுத்துவிட்டு காணாமல் போய்விடுவார். நாம் இறங்கவேண்டிய இடம் வரும்வரை மறக்காமல் அவரை&#160;&#8230; <a href="http://podhujanam.wordpress.com/2010/10/11/%e0%ae%aa%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/">Read&#160;more</a><img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=podhujanam.wordpress.com&amp;blog=12046518&amp;post=218&amp;subd=podhujanam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://podhujanam.files.wordpress.com/2010/10/stay-hungry-stay-foolish.jpg"><img class="alignleft size-medium wp-image-219" title="Stay-hungry-stay-foolish" src="http://podhujanam.files.wordpress.com/2010/10/stay-hungry-stay-foolish.jpg?w=194&#038;h=300" alt="" width="194" height="300" /></a>சென்ற மாதம், கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்னுடைய வண்டிக்காக காத்துக்கொண்டிருந்தேன். அரைமணிநேரம் ஆகியும் வண்டி வரவில்லை. டீ குடிக்க பர்சை துழாவியபோது, ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டு மட்டும் இருந்தது. சில்லரையில்லாமல் நம்ம ஊர் பஸ்ஸில் ஏறினால், கண்டக்டர், ஏதோ நாம் சில்லரையில்லாமல் பயணம் செய்யவே நேர்ந்து விட்டு வருவதைப்போல, இளக்காரமாக ஒரு பார்வை பார்த்து டிக்கட்டின் பின்புறம் 500/1 என்று எழுதிக் கொடுத்துவிட்டு காணாமல் போய்விடுவார்.</p>
<p>நாம் இறங்கவேண்டிய இடம் வரும்வரை மறக்காமல் அவரை அப்பப்ப பார்த்துக்கொண்டு, மிச்சப் பணத்தை ஞாபகம் வைத்துக்கொண்டு, சில்லரைக்காக அவருடைய கருணையை எதிர்பார்த்து காத்துக்கிடக்கவேண்டும். எனக்கும் வண்டியோட வாஸ்துவுக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம் என்பதால், இது போன்ற ரிஸ்க் எடுக்கவிரும்பவில்லை. பஸ் ஸ்டாண்டில் இருக்கும் ஒரே ஒரு ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம் என்று போனால், அங்கு ஏற்கனவே ஐந்தாறு பேர் காத்துக்கொண்டிருந்தனர்.</p>
<p>ஏடிஎம்முக்காக வரிசையில் நின்று, பஸ்ஸை தவறவிடவும் விரும்பவில்லை. அதனால் 500 ரூபாய் நோட்டை மாற்ற, அடுத்த பிளாட்பார்மில் இருந்த புத்தகக்கடைக்கு சென்றேன். திருப்பதிக்கான பஸ்கள் நிற்கும் பிளாட்பார்மில் நல்ல புத்தகக் கடை இருந்தது. நிறைய புத்தகங்கள் பார்வைக்கு இருந்தன. அப்போது எனக்கு புத்தகம் வாங்கும் மூட் இல்லையென்றாலும், 100 ரூபாய்க்கு குறையாமல் புத்தகம் வாங்கினால் தான் அந்த கடைகாரர் சில்லரை தரும் வாய்ப்பு இருப்பதால், 100லிருந்து 200க்குள் விலையுள்ள புத்தகங்களை தேடிக்கொண்டிருந்தேன். அப்போது தான் ஆனந்த விகனுடைய பிரசுரத்தில் வெளிவந்த முயற்சி திருவினையாக்கும் என்ற புத்தகத்தை பார்த்தேன். மிக நேர்த்தியான அட்டைப்படம், 500 பக்க கனமான புத்தகம். மிக முக்கியமாக, அதன் மூலவெளியீடு ஐஐஎம் நிறுவனம் என்று பார்த்த போது உடனே எடுத்துவிட்டேன். விலையைப் பார்த்தவுடன் என்னால் நம்பமுடியவில்லை. எப்படியும் 400ரூபாய் இருக்கும் என்று நினைத்த எனக்கு வெறும் 175 ரூபாயை பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது. பிறகு ஐஐஎம் சப்ஸிடைஸ் செய்திருக்கிறது என்று தெரிந்துகொண்டேன்.</p>
<p>சில்லரையை வாங்கிக்கொண்டு பஸ்ஸில் அமர்ந்த பின் உள்ளடக்கத்தை புரட்ட ஆரம்பித்தேன். பொதுவாக பஸ் பயணங்களின் போது படிப்பதை தவிர்த்துவருகிறேன். புத்தகத்தில் ஆழ்ந்திருக்கும் போது, சூழலை கவனிக்கவும் புரிந்துகொள்ளவும் கிடைக்கும் வாய்ப்பை நாம் தவறவிடுகிறோம். மேலும், பஸ்ஸினுடைய சீரற்றப் பயணத்துக்கிடையே படிப்பது கண்ணை சீக்கிரம் அயர்ச்சியடையச் செய்கிறது. ஆனால், இந்த முறை என்னுடைய ஆர்வத்தை அடக்கமுடியாமல் உள்ளடக்கத்தையும், முன்னுரையையும் படிக்க ஆரம்பித்து விட்டேன். அதன் முன்னுரையே, இது சாதாரண புத்தகமல்ல என்று சொல்லிவிட்டது.</p>
<p>ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் படித்து முடிக்கும் முன்பே வந்து குவியும் பிளேஸ்மென்ட்களையும், ஆறு இலக்க சம்பளங்களையும் உதறித்தள்ளி, தம்முடைய உள்ளுணர்வு சொல்லியபடி கரடுமுரடான சுயதொழிலைத் தேர்ந்தெடுத்து வெற்றிகரமாக இயங்கிவரும் 25 பேருடைய வாழ்க்கைக் கதைகள். இந்த 25 பேருக்கும் எடுத்த உடன் வெற்றி கிடைத்துவிடவில்லை. வேதனை, போராட்டம், விரக்தி என்று பல துயர நிகழ்வுகளிடையே சிறு கீற்றாய் அவர்களை வழிநடத்திய நம்பிக்கை ஒரு அற்புதத் தருணத்தில் அவர்களுக்கு கை கொடுத்துள்ளது.</p>
<p>இவர்கள் வயதால் வேறுபட்டவர்கள், பிறந்து வளர்ந்த சூழலில் வேறுபட்டவர்கள், குடும்ப பொருளாதார நிலையில் வேறுபட்டவர்கள், அவர்களுடைய துறைகளும் வெவ்வேறு. ஆனால் அவர்களிடம் இருந்த பொதுவான விஷயம், அவர்கள் தங்களுடைய கனவுகளை பின்பற்றினார்கள். எதாவது ஒரு நிறுவனத்தில் கிடைத்த வேலையை எடுத்துக்கொண்டு, சோப்பு விற்பதையோ, சாயம் கலந்த குளிர்பானத்தை விற்பதையோ, முகம் தெரியாத கஸ்டமர்களுக்காக பொட்டித் தட்டுவதையோ விட, தங்களுடைய உள்ளுணர்வின் குரலை காது கொடுத்துக் கேட்டவர்கள். அதற்காக வாழ்க்கையை பணயம் வைத்தவர்கள்.</p>
<p>இப்போது பிரபலமாக விளங்கும் நௌக்ரி.காம் சஞ்சிவ் பிக்சாண்டனி, சுபிக்ஷா ஆர்.சுப்பிரமணியன், எஜிகேம்ப் ஷாந்தனு, ரேணுகா சுகர்ஸ் நரேந்திரா, ஏகலைவா ஃபவுண்டேஷன் சுனில் ஹண்டா, ஆர்சிட் பார்மா ராகவேந்திர ராவ், கிவ் இந்தியா வெங்கட் கிருஷ்ணன், பேசிக்ஸ் விஜய் மகாஜன், சின்டெக்ஸ் டங்காயச் போன்றவர்களின் தொழில் சரிதத்தை படிக்கும் போது ஒன்றுமில்லாததில் இருந்து தொடங்கி பல மில்லியனுக்கு தம்முடைய நிறுவனங்களை கட்டமைத்த மேஜிக் வியக்கச்செய்கிறது. இதில் எனக்கு சுனில் ஹண்டாவுடைய கதையும் வெங்கட் கிருஷ்ணன் கதையும் ரொம்ப வியப்பு. இப்படியும் மனிதர்களா என்று ஆச்சரியப்பட்டு போனேன்.</p>
<p>உண்மையான கனவு என்பது நமது உறக்கத்தில் வருவதல்ல, எது நம்மை உறங்கவிடாமல் செய்கிறதோ அது என்பது புரிந்தது. 2005ம் ஆண்டு, ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு மாணவர்களுக்கான வகுப்பில் தொடக்க உரை ஆற்றும் போது ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்ன அறிவுரை தான் &#8220;ஸ்டே ஹங்ரி, ஸ்டே ஃபூலிஷ்&#8221;. இந்த புத்தகத்திலிருக்கும் அத்தனை தொழிலதிபர்களும் ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்னதையே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்துள்ளார்கள்.இவர்கள் அனைவரும் மற்றவர்கள் முட்டாள்தனம் என்று நினைத்த விஷயங்களை எடுத்துக்கொண்டவர்கள். இன்னும் விரிவாக அவற்றைச் செய்வதற்குறிய பசியுடன் இருந்தார்கள்.</p>
<p>இந்த புத்தகத்தின் மூல வடிவத்தை ஆங்கிலத்தில் எழுதிய ராஷ்மி பன்சாலும் ஒரு ஐஐஎம் அலும்னி, பத்திரிகையாளர். இளைஞர்களுக்கான இதழை நடத்தி வருகிறார். அவருடைய எழுத்து நடையும், பிரசன்டேஷனும் குறிப்பிட்ட நபருக்கு பக்கத்தில் நாம் உட்கார்ந்து டீ அருந்திக்கொண்டே பேசிச் செல்வது போல் அவ்வளவு அன்யோன்யமாக இருக்கிறது. படிக்க ஆரம்பித்தால் கீழே வைப்பதற்கு தோன்றவில்லை. பிறகு இதன் ஆங்கில வடிவத்தையும் இணையதளத்தில் எடுத்துப் படித்தேன். ஆங்கில நடையும் மிக எளிமையாக சரலமாக இருந்து நல்ல வாசிப்பனுபவமாக அமைந்தது. தமிழில் ரவிபிரகாஷ் மொழிபெயர்த்திருக்கிறார். அற்புதமான ஆகச்சிறந்த மொழி பெயர்ப்பு. மனுஷன், ஆங்கில மூலவடிவத்தின் ஜீவனை அப்படியே தமிழுக்கு கொண்டுவந்திருக்கிறார். ஆனால் தமிழ் வடிவத்தில் வைத்திருக்கும் முயற்சி திருவினையாக்கும் என்ற தலைப்பு ரொம்ப கன்வன்ஷனலாக இருக்கிறது. படித்தவும் பற்றவைக்கவில்லை. ஆங்கிலத்தின் &#8220;ஸ்டே ஹங்ரி, ஸ்டே ஃபூலிஷ்&#8221; என்ற தலைப்பு சொல்லும் செய்தியை தமிழ் தலைப்பு சொல்ல மறந்துவிட்டது. ஆ.விகடன் எப்படி இதை அனுமதித்தது என்பது வியப்பு. இருந்தாலும் உள்ளடக்கத்தில் தமிழ் பதிப்பு மிகச்சிறந்ததாகவே வெளிவந்திருக்கிறது.</p>
<p>இந்த 25 பேரைப்போல இன்னும் பலர் இன்னமும் வெளியே தம்முடைய கனவை துரத்திக்கொண்டிருக்கிறார்கள். தம்முடைய நம்பிக்கையுடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த புத்தகம் நம்பிக்கையளிக்கும். சக்தியையும் புத்துணர்ச்சியையும் புதுப்பிக்கும். இந்த புத்தகத்தை ஒரே ஸ்டெட்சில் படித்து முடித்தபோது என்னுடைய பசி மற்றும் அறியாமையின் கணத்தை உணர்ந்தேன். நீங்களும் படிக்கும் போது உணரக்கூடும்.</p>
<p><em>வால்:இந்த புத்தகத்தின் ஆங்கில மொழியின் மென்நகலை வேண்டுவோர் http://ciieindia.org/programmes/stay-hungry-stay-foolish என்ற இணையதளத்துக்கு சென்று உங்களைப் பற்றிய அடிப்படை விவரங்களை கொடுத்துவிட்டு தரவிரக்கிக்கொள்ளலாம். </em></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/podhujanam.wordpress.com/218/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/podhujanam.wordpress.com/218/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/podhujanam.wordpress.com/218/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/podhujanam.wordpress.com/218/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/podhujanam.wordpress.com/218/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/podhujanam.wordpress.com/218/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/podhujanam.wordpress.com/218/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/podhujanam.wordpress.com/218/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/podhujanam.wordpress.com/218/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/podhujanam.wordpress.com/218/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/podhujanam.wordpress.com/218/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/podhujanam.wordpress.com/218/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/podhujanam.wordpress.com/218/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/podhujanam.wordpress.com/218/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=podhujanam.wordpress.com&amp;blog=12046518&amp;post=218&amp;subd=podhujanam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://podhujanam.wordpress.com/2010/10/11/%e0%ae%aa%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>10</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/aa42ef24a4845da532e3f07a49fc70d8?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">pakepa</media:title>
		</media:content>

		<media:content url="http://podhujanam.files.wordpress.com/2010/10/stay-hungry-stay-foolish.jpg?w=194" medium="image">
			<media:title type="html">Stay-hungry-stay-foolish</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>எந்திரன்: சாரி ஷங்கர்</title>
		<link>http://podhujanam.wordpress.com/2010/10/08/%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%b7%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d/</link>
		<comments>http://podhujanam.wordpress.com/2010/10/08/%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%b7%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Fri, 08 Oct 2010 02:28:01 +0000</pubDate>
		<dc:creator>ஜானகிராமன்</dc:creator>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[எந்திரன்]]></category>
		<category><![CDATA[ரஜினி]]></category>
		<category><![CDATA[ஷங்கர்]]></category>

		<guid isPermaLink="false">http://podhujanam.wordpress.com/?p=208</guid>
		<description><![CDATA[வீட்டுக்காரம்மாவோட தொந்தரவு தாங்காமல் நேற்று மாலை எந்திரன் போகவேண்டியிருந்தது. எங்க ஊரில் எந்திரன் ஃபீவர் ஒரு வாரத்துக்குள்ளேயே குறைஞ்சிடுச்சு. ஈவினிங் ஷோ, 50ரூபாய்க்கே கோல்டன் மினியில் டிக்கட் கிடைத்தது. (ஆனா, 20 நாள் கழித்தும், நான் மகான் அல்ல படத்துக்கு 60 ரூபாய் கொடுத்துப் போனேன்.) படத்தில் ஷங்கர், ரஜினி, ரத்தினவேலு மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் கடினமான உழைப்பு அப்பட்டமாகத் தெரிந்தது. தமிழக தொழில்நுட்ப கலைஞர்களின் திறமையை உலகுக்கு வெளிப்படுத்தியதில் நிச்சயம் எந்திரன் பாராட்டப்படவேண்டிய முயற்சி. ஆனால்&#160;&#8230; <a href="http://podhujanam.wordpress.com/2010/10/08/%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%b7%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d/">Read&#160;more</a><img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=podhujanam.wordpress.com&amp;blog=12046518&amp;post=208&amp;subd=podhujanam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align:center;"><a href="http://podhujanam.files.wordpress.com/2010/10/normal_endhiran_goa_photo2.jpg"><img class="size-medium wp-image-209 aligncenter" title="normal_Endhiran_goa_photo2" src="http://podhujanam.files.wordpress.com/2010/10/normal_endhiran_goa_photo2.jpg?w=300&#038;h=199" alt="" width="300" height="199" /></a></p>
<p>வீட்டுக்காரம்மாவோட தொந்தரவு தாங்காமல் நேற்று மாலை எந்திரன் போகவேண்டியிருந்தது. எங்க ஊரில் எந்திரன் ஃபீவர் ஒரு வாரத்துக்குள்ளேயே குறைஞ்சிடுச்சு. ஈவினிங் ஷோ, 50ரூபாய்க்கே கோல்டன் மினியில் டிக்கட் கிடைத்தது. (ஆனா, 20 நாள் கழித்தும், நான் மகான் அல்ல படத்துக்கு 60 ரூபாய் கொடுத்துப் போனேன்.)</p>
<p>படத்தில் ஷங்கர், ரஜினி, ரத்தினவேலு மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் கடினமான உழைப்பு அப்பட்டமாகத் தெரிந்தது. தமிழக தொழில்நுட்ப கலைஞர்களின் திறமையை உலகுக்கு வெளிப்படுத்தியதில் நிச்சயம் எந்திரன் பாராட்டப்படவேண்டிய முயற்சி. ஆனால் ஒரு படத்தின் உன்னதத்தன்மையை அதில் செலுத்தப்பட்டுள்ள உழைப்பை மட்டும் வைத்து தீர்மானிக்கக்கூடாது. அந்த வகையில் இராவணனுக்குப் பிறகு இந்த படமும் ஏமாற்றம் தான்.</p>
<p>பொதுவாக ஷங்கர் படம் திரையில் முதல்முறை பார்க்கும் போது, மிகப்பெரிய காட்சிவிருந்தாக அமைந்திருக்கும். ரசிகனை எதையும் யோசிக்கச்செய்யாமல், அடுத்தடுத்த காட்சியின் பிரம்மாண்டத்தில் கரைந்து போகச்செய்யும். பின்னால் கொஞ்சம் சாவகாசமாக யோசிக்கும் போது, அந்த காட்சியமைப்புகளின் அபத்தமும் லாஜிக்கில்லாத தன்மையும் தெரியவரும். எந்திரன் படத்தில் வரும் சிந்தனையற்ற ரோபோக்களாக ரசிகர்கள் இருந்தால் ஷங்கர் படத்தை வியந்து ரசிக்கமுடியும்.</p>
<p>இந்த படத்திலும் இதே போக்கு வலிமையாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இப்ப படத்தின் ஆதார சிக்கலை எடுத்துக்கொள்வோம். வசீகரன் உருவாக்கிய ரோபோ, உணர்வுகளைப் பெறுகிறது. அதனைத்தொடர்ந்து வசீகரனின் காதலி மீது, காதல் கொள்கிறது. இதன் தீவிரத்தை அறிந்த வசீகரன், ஒரு கட்டத்தில் அதனை அக்குவேறு ஆணி வேராக பிரித்து குப்பையில் வீசிவிடுகிறான். அதன் பின் கதையின் போக்குக்கு இந்த நிகழ்வு ஆதாரமாக அமைகிறது. இதை திரைக்கதையில் நியாயப்படுத்துவதில் தான் படத்தின் கலைப்பூர்வமான வெற்றி அமைந்திருக்கிறது.</p>
<p>உண்மையில் 10 ஆண்டுகள் உழைத்து உருவாக்கிய ஒரு ரோபோவில், காதல் உணர்வு தோன்றி, தனக்கே ஆபத்தாகும் என்றால், அதற்கடுத்த காட்சியமைப்புகள் லாஜிக்காக</p>
<p>1.  தன்னுடைய காதலியின் மீதான மையலை, சகோதரி பாசமாக மாற்றும் கமேண்டை வசீகரன் சிட்டியின் உள்திணிப்பது</p>
<p>2.  முடியவில்லை என்றால், ஐஸ்வர்யா ஸ்கின்னுடன் இன்னொறு ரோபோவை உருவாக்கி ஜோடி சேர்ப்பது</p>
<p>3.  அதுவும் முடியவில்லை என்றால், மிக ஆபத்தான ரோபோ கருவியை கவனத்துடன் லேப்பிலேயே டிஸ்மேன்டில் செய்து, முழுமையாக செயலிழக்கச்செய்வது</p>
<p>ஆகிய 3 செயல்களுக்கான வாய்ப்புகள் தான் யதார்த்தத்தில் அமையும். இதை விட்டுவிட்டு, கட்டையால் கைகாலை உடைத்து, குப்பைத் தொட்டியில் குவிக்கும் அபத்தம், வசீகரன் என்ற கேரக்டரை பொறுப்பற்ற கேனைப்பையனாக ஆக்கிவிடுகிறது. அந்த ஸீனிலேயே, படத்தின் திரைக்கதை ஓசோன் ஓட்டையை விட பெரிய ஓட்டையுடன் வந்துவிடுகிறது.</p>
<p>அதே போல, சில சின்னச் சின்ன ஷாட்கள் காட்சிக்கட்டமைப்பை இல்லாஜிக்காக ஆக்கியிருப்பது படம் பார்க்கும் போதே தெரிந்தது.</p>
<p>ரயில் சண்டையின் போது, அடித்து வெளியே போடப்பட்ட ரோபோ, இல்லாத டிரான்ஸ்பார்மரில் கரண்ட் ஏற்றிக்கொண்டு, தண்டவாளத்தில் வேகமாக வரும்போது, ஒரு மாடு இருப்பதை பார்த்து, அடுத்த தண்டவாளத்துக்கு மாறும். அந்த நேரத்தில், ரோபோவுக்கு உணர்ச்சிகள் என்பது இல்லை என்றால், ஏன் மாட்டை காப்பாற்ற அடுத்த தண்டவாளத்துக்கு மாற முடியும்?</p>
<p>மனித உணர்ச்சிகள் பெற்றதன் அடையாளமாக, ரோபோ, பிரசவம் பார்க்கும் சீன் வைத்திருப்பார்கள். அந்த சீன் கூட, ரோபோவின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்குமே தவிர, அதில் மனித உணர்வை ரோபோ வெளிப்படுத்துவதாக காட்சியமைக்கப்பட்டிருக்காது. இந்த காட்சிக்கும்,  தீவிபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் காட்சிக்கும் எந்த பெரிய வித்தியாசமும் இல்லை.</p>
<p>கடைசியில், பல வடிவங்களில் உருமாறும் பவர் ரேஞ்சர்ஸ், காட்டூன் நெட்வொர்க் காட்சியமைப்புகளில், அவ்வளவு பெரிய உருவம் கட்டமைக்கும் அளவுக்கு, அத்தனை ரோபோட் பிரதிகள், பரேட் காட்சியில் காட்டப்படவில்லை. கடைசியில், வசீகரன் இந்த பிரச்சனையை எப்படி அறிவுப்பூர்வமாக தீர்ப்பான் என்று எதிர்பார்த்தால், சும்மா பொட்டிய தட்டிவிட்டு, செயலிழக்கச்செய்கிறான். இதையெல்லாம் நாங்க, அம்புலிமாமா புத்தகத்திலேயே படிச்சாச்சு ஷங்கர். மகா மொக்கை.</p>
<p>கடைசியில் படத்தை எப்படா முடிப்பாய்ங்கன்னு ஆயிடுச்சி. அப்புறம், கால்மணி நேரத்து மேல ஓடும் படைப்பாளிகளின் பட்டியல், அதில் 70% பேர், வெளிநாட்டுக்காரர்கள் என்றால், நான் கூட காசு கொடுத்து, கேமரூனை அசிஸ்டண்ட்டா வைச்சி எதாவது ஒரு படத்தை எடுத்து, உலக சாதனை செஞ்சேன், தமிழனுக்கு வாழ்நாள் பெருமை கொடுத்தேன்னு சொல்லிக்கலாம் போலயிருக்கு.</p>
<p>சாரி ஷங்கர். சயின்ஸ் ஃபிக்ஷன்ன்னா ஏலியன்ஸ், கால எந்திரம், ரோபோடிக்ஸ் எனும் இந்த 3 வெரைய்டியை மாத்தி மாத்தி துவைச்சு காயப்போட்டு ஹாலிவுட்டில் எடுத்திட்டிருக்காங்க.(இன்செப்ஷன் விதிவிலக்கு) நீங்க கொஞ்சம் வேறமாதிரி யோசிச்சிருக்கலாம். சரி விடுங்க சட்டியில இருந்தா தானே அகப்பையில வரும். அப்புறம், எந்திரன்னு படத்தோட பெயரை தமிழில் வரிவிலக்குக்காக வைச்சிட்டு, படத்தில் எந்த ஒரு இடத்திலும் வசனத்தில் எந்திரன் என்று பயன்படுத்தவில்லையே? டைட்டிலை மக்கள் மனதில் ஸிங்க் பண்ண மட்டும் பாட்டில் பயன்படுத்தியிருக்கிறீர்கள். இது போன்ற, குறுக்குபுத்தி ரெட் சிப்பை, எப்ப உங்க மனதில் இருந்து மாற்றப்போகிறீர்கள்?</p>
<p>மற்றபடி, அடுத்தடுத்த காட்சிகள், உண்மைத்தமிழன் அண்ணாச்சியின் நீண்ட ஆய்வில் சொல்லியிருப்பது போல மகா மொக்கையாகவும், காலிப்பிளவரை படம் பார்ப்பவர் காதில் வைத்துவிடுவது போலவும் உள்ளது.</p>
<p>ஆனா, இந்த படத்திலும் ஊழலை ஒழிக்கறேன், நாட்டை திருத்துறேன்னு இறங்காம இருந்ததுக்கு ரொம்ப நன்றி.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/podhujanam.wordpress.com/208/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/podhujanam.wordpress.com/208/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/podhujanam.wordpress.com/208/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/podhujanam.wordpress.com/208/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/podhujanam.wordpress.com/208/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/podhujanam.wordpress.com/208/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/podhujanam.wordpress.com/208/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/podhujanam.wordpress.com/208/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/podhujanam.wordpress.com/208/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/podhujanam.wordpress.com/208/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/podhujanam.wordpress.com/208/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/podhujanam.wordpress.com/208/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/podhujanam.wordpress.com/208/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/podhujanam.wordpress.com/208/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=podhujanam.wordpress.com&amp;blog=12046518&amp;post=208&amp;subd=podhujanam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://podhujanam.wordpress.com/2010/10/08/%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%b7%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>20</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/aa42ef24a4845da532e3f07a49fc70d8?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">pakepa</media:title>
		</media:content>

		<media:content url="http://podhujanam.files.wordpress.com/2010/10/normal_endhiran_goa_photo2.jpg?w=300" medium="image">
			<media:title type="html">normal_Endhiran_goa_photo2</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>வலசை போதல்</title>
		<link>http://podhujanam.wordpress.com/2010/06/24/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%9a%e0%af%88-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/</link>
		<comments>http://podhujanam.wordpress.com/2010/06/24/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%9a%e0%af%88-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Thu, 24 Jun 2010 08:16:02 +0000</pubDate>
		<dc:creator>ஜானகிராமன்</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[இடம் பெயர்வு]]></category>
		<category><![CDATA[ஊர் விட்டு வெளியேறுதல்]]></category>

		<guid isPermaLink="false">http://podhujanam.wordpress.com/?p=178</guid>
		<description><![CDATA[வடபழனி வசந்தபவனில் நேற்றிரவு உணவு சாப்பிட்டு விட்டு காபியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது நான் சாப்பிட்டத் தட்டை எடுக்க தயக்கத்துடன் நின்றுகொண்டிருந்த கிளீனர் சிறுவனைப் பார்த்தபோது வித்தியாசமாகப் பட்டது. அவன் வடகிழக்கு மாநிலத்திலிருந்து வந்திருப்பான் போல. சுற்றுமுற்றும் பார்த்த போது அவன் வயதை ஒத்த பல சிறுவர்கள் அங்கு பணியிலிருந்தார்கள். இதே போல் வடகிழக்கு மாநிலச் சிறுவர்களை மதுரை, விழுப்புரம், ராமநாதபுரம் என்று பல இடங்களில் குறிப்பாக உணவகங்களில் சமீபத்தில் பார்த்து வருகிறேன். ஆச்சரியமாக இருந்தது. பிழைப்புக்காக&#160;&#8230; <a href="http://podhujanam.wordpress.com/2010/06/24/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%9a%e0%af%88-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/">Read&#160;more</a><img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=podhujanam.wordpress.com&amp;blog=12046518&amp;post=178&amp;subd=podhujanam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://podhujanam.files.wordpress.com/2010/06/hot-water-migration.jpg"><img class="aligncenter size-medium wp-image-179" title="migration" src="http://podhujanam.files.wordpress.com/2010/06/hot-water-migration.jpg?w=300&#038;h=236" alt="" width="300" height="236" /></a></p>
<p>வடபழனி வசந்தபவனில் நேற்றிரவு உணவு சாப்பிட்டு விட்டு காபியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது நான் சாப்பிட்டத் தட்டை எடுக்க தயக்கத்துடன் நின்றுகொண்டிருந்த கிளீனர் சிறுவனைப் பார்த்தபோது வித்தியாசமாகப் பட்டது. அவன் வடகிழக்கு மாநிலத்திலிருந்து வந்திருப்பான் போல. சுற்றுமுற்றும் பார்த்த போது அவன் வயதை ஒத்த பல சிறுவர்கள் அங்கு பணியிலிருந்தார்கள். இதே போல் வடகிழக்கு மாநிலச் சிறுவர்களை மதுரை, விழுப்புரம், ராமநாதபுரம் என்று பல இடங்களில் குறிப்பாக உணவகங்களில் சமீபத்தில் பார்த்து வருகிறேன். ஆச்சரியமாக இருந்தது. பிழைப்புக்காக நமது தமிழர் புலம் பெயர்வது குறைந்து வேற்று மாநிலத்தவர்கள் நம்மாநிலத்தில் வரும் அளவுக்கு முன்னேறிவிட்டோமா என கேட்டுக்கொண்டேன்.</p>
<p>நண்பரிடம் இதுபற்றி பேசிக்கொண்டிருந்தபோது தமிழ்நாட்டில் வடகிழக்கு மாநிலத்தவர் ஆயிரக்கணக்கில் பிழைப்புக்காக வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். வாழ்வாதாரத்துக்காக சொந்த ஊர் விட்டு சொற்ப வருமானத்தில் முகமறியாத மொழி, கலாச்சாரம் மாறான இடத்திற்கு இடம்பெயர்வது வலிநிறைந்தது.</p>
<p>சிறுவயதில் எங்கள் வீட்டுப்பக்கம் அவ்வப்போது வந்து போகும் கூர்க்கர் இன இரவுக்காவலாளி என்னுடைய ஆச்சரியம். அவரது வித்தியாசமான முகஅமைப்பு,காக்கிச்சட்டை, கையில் வைத்திருக்கும் பெரிய தடி, இடுப்புக்கத்தி, கழுத்தில் தொங்கும் விசில் எல்லாம் எங்களுடைய பள்ளிகால பேச்சுக்கான கருப்பொருட்கள். கூர்க்கா யாரையாவது கத்தியால குத்தினா அவனை போலிஸ் கூட கேள்வி கேட்கமுடியாது. நைட்ல பேய்களிடமிருந்து காத்துக்கொள்ள அவன் கழுத்தில் மந்திரித்த தாயத்து இருக்கும் என்றெல்லாம் அவரைப்பற்றி எங்கள் கற்பனைகள் இட்டுக்கட்டிக்கொள்ளும்.</p>
<p>மாதந்தோறும் ஒரு வீடு தரும் வெறும் 5 ரூபாய்க்காக எல்லா இரவுகளிலும் உறக்கத்தைத் தொலைத்த அவர்களின் வாழ்க்கை என்னைச் சலனப்படுத்தும். சில வீடுகளில் இரவு நேர விசில் சத்தம் அவர்களுக்கு கேட்கவில்லை என்று கூறி மாதச்சந்தாவை மறுப்பார்கள். இவர்கள் அரைகுறைத் தமிழில் பேசி அவர் பக்க நியாயத்தை சொல்லித் தோற்று முகம் வாடி போவதை அடிக்கடி சந்தித்திருக்கிறேன். பிறகு ரொம்ப நாள் கழித்து ஒரு நாள் மாலை நேரத்தில் வழியில் அவரை சந்தித்தபோது டீ சாப்பிடுவோம் வாங்க என்று கேட்டபோது அவர் மகிழ்ந்து போனர். நான் எங்கிருப்பதாக விசாரித்தார். என் வீடு சொன்னபிறகு என்னை அடையாளம் கண்டுகொண்டார். யாருமே இதுவரை அவருக்கு டீ வாங்கித்தந்ததில்லை என்று சொல்லிக்கொண்டார். பிறகு அவ்வப்போது சந்திப்போம். ஒரு சகோதரனின் வாஞ்சையுடன் வணக்கம் சொல்வார். இப்போது அவரைப் பற்றிய தகவல் தெரியாமல் போனது.</p>
<p>பொருளாதார வாய்ப்புகளின் ஈர்ப்புக் காரணமாக நமது தகவல் தொழில்நுட்ப துறையினர் வேறிடம் புலம் பெயர்வதைவிட இருக்கின்ற இடத்தில் வாழ்வதற்கான வழிகள் இல்லாமல் வேறிடம் நோக்கித் துரத்தப்படும் அவலம் கொடுமையானது. ஈசிஆர் சாலைகளில் வண்டிகளில் பறக்கும் போது, அதில் முகமறியாத ஆயிரக்கணக்கான ஆந்திர தொழிலாளர்களின் இடபெயர்ந்த வாழ்க்கையும் கரைந்துள்ளதை உணரமுடிகிறது.  தென்மாவட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் திருப்பூரிலும் அதைச்சுற்றியுள்ள டெக்ஸ்டைல் நகரங்களிலும் பிழைப்புக்காக வாழ்ந்து திருவிழா காலங்களில் சொந்த ஊர் நோக்கி மிகக்கொடுமையான நெரிசல் மிகுந்த பயணங்களை மேற்கொள்ளும் போது அவர்களின் சொந்த ஊர் மண்ணே அது போன்ற எதிர்பாரா பயணங்களுக்கான சக்தியை கொடுக்கிறது. </p>
<p>எனக்கெல்லாம் 3 நாள் ஊர் தாண்டி இருந்தால் நிலைப்புக்கொள்ளாது. எஸ்.ராமகிருஷ்ணன் சொல்வது போல், நாம் வழக்கமாக படுக்கும் தலையணை இல்லையென்றால் கூட உறக்கம் புரண்டுபோய்விடுகிறது. வாழ்க்கையை உற்சாகமாய் எதிர்கொள்ளும் பதிண்பருவத்தில்,  குடும்ப தேவைகளுக்காக தெரியாத ஊரில் வாழவிதிக்கபட்டவர்களை எப்போதாவது நாம் சந்திக்க நேர்ந்தால் சிறு புன்சிரிப்பு, சின்ன விசாரிப்பு முடிந்தால் உதவி செய்லாமே. அவர்களை நோக்கிய அக்கரையான சிறு செயலும் அவர்களுக்குள் பெரிய நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் கொடுக்குமல்லவா…</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/podhujanam.wordpress.com/178/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/podhujanam.wordpress.com/178/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/podhujanam.wordpress.com/178/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/podhujanam.wordpress.com/178/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/podhujanam.wordpress.com/178/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/podhujanam.wordpress.com/178/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/podhujanam.wordpress.com/178/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/podhujanam.wordpress.com/178/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/podhujanam.wordpress.com/178/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/podhujanam.wordpress.com/178/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/podhujanam.wordpress.com/178/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/podhujanam.wordpress.com/178/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/podhujanam.wordpress.com/178/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/podhujanam.wordpress.com/178/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=podhujanam.wordpress.com&amp;blog=12046518&amp;post=178&amp;subd=podhujanam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://podhujanam.wordpress.com/2010/06/24/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%9a%e0%af%88-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>15</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/aa42ef24a4845da532e3f07a49fc70d8?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">pakepa</media:title>
		</media:content>

		<media:content url="http://podhujanam.files.wordpress.com/2010/06/hot-water-migration.jpg?w=300" medium="image">
			<media:title type="html">migration</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ம.ம.உலகம் (பகுதி 3)</title>
		<link>http://podhujanam.wordpress.com/2010/06/21/%e0%ae%ae-%e0%ae%ae-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-3/</link>
		<comments>http://podhujanam.wordpress.com/2010/06/21/%e0%ae%ae-%e0%ae%ae-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-3/#comments</comments>
		<pubDate>Mon, 21 Jun 2010 03:13:17 +0000</pubDate>
		<dc:creator>ஜானகிராமன்</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[சுற்றுச்சூழல்]]></category>
		<category><![CDATA[பல்லுயிர் பெருக்கம்]]></category>

		<guid isPermaLink="false">http://podhujanam.wordpress.com/?p=174</guid>
		<description><![CDATA[கிராமப்புறங்களில் இன்னும் சில குடும்பங்கள் பாரம்பரிய விதைகளை காலங்காலமாக பாதுகாத்து வருகின்றனர். தம்முடைய நிலத்தில் விளைந்த தானியங்களை நான்கு பங்குகளாக பிரித்து, அடுத்த வருட விதைக்காக ஒரு பங்கும், தமது உணவுக்காக ஒரு பங்கும்,  விவசாயத்தில் பங்கு கொண்ட தொழிலாளர்களுக்கு ஒரு பங்கும் எடுத்து வைத்து மீதமானதை விற்கும் பழக்கம் இன்றும் உள்ளது. விதைக்காக ஒதுக்கப்பட்ட தானியத்தை தனியாக ஒரு மண்குடுவையில் இட்டு, அதற்கு வெளிப்புறம் குளுமைக்காக செம்மண் பூசி, சுத்தமான இருட்டு அறையில் வருடம் முழுக்க&#160;&#8230; <a href="http://podhujanam.wordpress.com/2010/06/21/%e0%ae%ae-%e0%ae%ae-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-3/">Read&#160;more</a><img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=podhujanam.wordpress.com&amp;blog=12046518&amp;post=174&amp;subd=podhujanam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://podhujanam.files.wordpress.com/2010/06/granary.jpg"><img class="aligncenter size-medium wp-image-175" title="granary" src="http://podhujanam.files.wordpress.com/2010/06/granary.jpg?w=300&#038;h=226" alt="" width="300" height="226" /></a></p>
<p>கிராமப்புறங்களில் இன்னும் சில குடும்பங்கள் பாரம்பரிய விதைகளை காலங்காலமாக பாதுகாத்து வருகின்றனர். தம்முடைய நிலத்தில் விளைந்த தானியங்களை நான்கு பங்குகளாக பிரித்து, அடுத்த வருட விதைக்காக ஒரு பங்கும், தமது உணவுக்காக ஒரு பங்கும்,  விவசாயத்தில் பங்கு கொண்ட தொழிலாளர்களுக்கு ஒரு பங்கும் எடுத்து வைத்து மீதமானதை விற்கும் பழக்கம் இன்றும் உள்ளது. விதைக்காக ஒதுக்கப்பட்ட தானியத்தை தனியாக ஒரு மண்குடுவையில் இட்டு, அதற்கு வெளிப்புறம் குளுமைக்காக செம்மண் பூசி, சுத்தமான இருட்டு அறையில் வருடம் முழுக்க பயபக்தியுடன் பாதுகாத்து வருவர். விதைத் தானியம் இருக்கும் அறை பூஜை அறையைவிட அதிக அக்கரையுடன் பராமரிக்கப்படும். சிறு வயதில் என்னுடைய தாத்தா வீட்டில் பார்த்ததாக ஞாபகம். அதற்க்குப் பிறகு எனது தந்தையோ நானோ விவசாயத்தில் ஈடுபடாததால் கடந்த 2 தலைமுறைகளாக அந்த களஞ்சிய அறை யாரும் கவனிப்பாரற்று சிதிலமடைந்து போயிருக்கிறது. ஏறக்குறைய நிறைய வீடுகளில் இந்த நிலைமைதான். விவசாயியின் மகன் அல்லது மகள் விவசாயியாவதை விரும்புவதில்லை. சென்னைக்குப் பக்கத்தில் ஸ்ரீபெரும்புதுர் பகுதியில் விவசாயம் முழுவதுமாக செத்துவிட்டது. வளமான விவசாய நிலத்தை தொழிற்சாலைகளுக்கு விற்றுவிட்டு விவசாயிகள் வாட்ச்மேன்களாகவும், சமையல்காரர்களாகவும், ரியல் எஸ்டேட் அதிபர்களாகவும் மாறிய அவலம் மனிதனுடைய பேராசையின் விளைவு. அந்த பகுதியில் என்னுடைய சிறு வயதில் கூட்டங்கூட்டமாக சிவப்பு நிற அலகுடைய கொக்குகளை பார்த்து வியந்திருக்கிறேன். இப்போது எங்கு பார்த்தாலும் கான்கிரிட் கட்டமைப்புகள் அங்கிருந்த பல பறவை, சிறுபூச்சியினங்களின் சாமதிகளில் கட்டப்பட்டிருப்பதாகவே உணர்கிறேன்.</p>
<p>விவசாயத்திற்கான இளங்கலை முதுகலைப் படிப்பு படிப்பவர்கள் கூட விவசாய அதிகாரியாகவோ, அறைக்குள் நடத்தும் ஆராய்ச்சியாளராகவோ பணியாற்றத்தான் விரும்புகிறார்களே தவிர களத்தில் இறங்கி விவசாயம் செய்வதில் விருப்பம் காட்டுவதில்லை. விவசாயத்தில் ஈடுபடாமல் விவசாயம் சார்ந்த இரண்டாம் நிலை சேவைகளுக்கு காலர் அழுக்காகாமல் வேலை செய்யநினைப்பதில் எந்த நியாயமும் இல்லை. இப்போதெல்லாம் விவசாயி கூட தாம் உற்பத்தி செய்யும் எல்லா விளைச்சளையும் விற்று விட்டு தனது உணவை கடைகளில் வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் உள்ளூர் நிதிவளம் வெளியே செல்வதுடன், சுயசார்புடன் இருந்த வாழ்க்கை வியாபாரியை சார்ந்தமையும் நிச்சயமற்றத் தன்மையை உண்டாக்குகிறது.</p>
<p>பலவகை உயிரினங்களின் அழிவுக்கு காரணங்களாக எட்வர்ட்வில்சன் எனும் அறிஞர் குடியேற்றம், வெளியிலிருந்து வரும் உயிரின வகைகள், சுற்றுப்புற மாசுபாடு, மக்கள்தொகைப்பெருக்கம், மிதமிஞ்சிய அறுவடை (HIPPO: Habitat destruction, Invasive species, Pollution, Over-Population, and Over-harvesting) ஆகிய 5 காரணங்களை முன்வைக்கிறார். இவை அனைத்தும் மனிதனால் மட்டுமே ஏற்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.</p>
<p>அழிந்து வரும் தாவர இனங்களை பாதுகாக்க 4C அணுகுமுறை என்ற ஒன்றை வல்லுனர்கள் பரிந்துரைக்கின்றனர். பாதுகாப்பது, பயிரிடுவது, உட்கொள்வது மற்றும் சந்தைப்படுத்துவது (Conservation, Cultivation, Consumption &amp; Commercialize) ஆகிய நான்கு வழிமுறைகள் மேற்கொள்ளப்படும் போது குறிப்பிட்ட தாவர இனம் அழியாமல் காக்கமுடியும். இதற்கு அரசாங்கமோ துறை நிபுணர்களோ மட்டும் போராடினால் போதாது. பெருவாரியான மக்கள் பங்கெடுக்கவேண்டும். பல்லுயிர்ப் பாதுகாப்பை சமூகம் புரிந்து கொண்டாடினால் மட்டுமே இது சாத்தியப்படும்.</p>
<p>மகாபாரதத்தில் ஒரு கதை வரும். பாண்டவர்கள் ஏன் இந்த உலகம் இவ்வளவு பெரியதாக, பல வகைத் தாவரங்களை உள்ளடக்கியுள்ளது. கடவுளுக்கு அறிவில்லை என்று பேசிக்கொண்டிருந்தனர். இதைக்கேட்ட துரோணர், பாண்டவர்களிடம் காட்டுக்குச் சென்று மனித குலத்துக்கு பயன்படாத எதாவது ஒரு தாவரத்தை எடுத்து வரச்சொன்னாராம். பாண்டவர்கள் காட்டுக்குச்சென்று ஆய்ந்த போது எல்லா தாவரங்களும் எதாவது ஒரு வகையில் மனிதனுக்கு பயன் தரும் வகையில் உள்ளதை அறிந்தனர். வெறும்கையுடன் திரும்பி வந்து எல்லாத் தாவரங்களும் எதோ ஒரு வகையில்தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளதை தெரிவித்தனராம். நமது தலைமுறைக்கு காட்டுக்குச் சென்று பல வகை தாவரங்களை அறிந்து கொள்ளக்கூட வாய்ப்பில்லாமல் அனைத்தையும் அழித்துக்கொண்டிருக்கிறோம்.</p>
<p>ஒன்று மட்டும் நிச்சயம். தாவரங்களும் மற்ற உயிர்களும் மனிதன் இல்லாமல் வாழமுடியும். ஆனால் மனிதனால் தாவரங்களோ விலங்குகளோ இல்லாமல் வாழமுடியாது. இருக்கிற பூமியெல்லாம் காட்டைத் திருத்தி கட்டிடங்களாக எழுப்பி செங்கலையும் மணலையுமா நாம் தின்னப்போகிறோம்?</p>
<p>(இதுபற்றி உங்களுடைய கருத்தை பகிர்ந்துகொள்ளுங்கள்.  பிறகு தொடரும்)</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/podhujanam.wordpress.com/174/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/podhujanam.wordpress.com/174/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/podhujanam.wordpress.com/174/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/podhujanam.wordpress.com/174/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/podhujanam.wordpress.com/174/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/podhujanam.wordpress.com/174/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/podhujanam.wordpress.com/174/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/podhujanam.wordpress.com/174/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/podhujanam.wordpress.com/174/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/podhujanam.wordpress.com/174/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/podhujanam.wordpress.com/174/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/podhujanam.wordpress.com/174/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/podhujanam.wordpress.com/174/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/podhujanam.wordpress.com/174/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=podhujanam.wordpress.com&amp;blog=12046518&amp;post=174&amp;subd=podhujanam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://podhujanam.wordpress.com/2010/06/21/%e0%ae%ae-%e0%ae%ae-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-3/feed/</wfw:commentRss>
		<slash:comments>6</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/aa42ef24a4845da532e3f07a49fc70d8?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">pakepa</media:title>
		</media:content>

		<media:content url="http://podhujanam.files.wordpress.com/2010/06/granary.jpg?w=300" medium="image">
			<media:title type="html">granary</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>
